ETV Bharat / city

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.

author img

By

Published : May 22, 2021, 6:17 PM IST

டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!
டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலாகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று(மே.22) இரவு 9 மணிவரையிலும், நாளை(மே.22) காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு நாள்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த செய்தி மதுபிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.800 கோடிக்கும் மேல் மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கிற்குப் படையெடுத்த மதுப்பிரியர்கள் - இரண்டு நாளில் ரூ. 854 கோடி வசூல்!

தமிழ்நாட்டில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி முதல் அமலாகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு இன்றும் நாளையும் அனைத்துக் கடைகளும் இயங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் இன்று(மே.22) இரவு 9 மணிவரையிலும், நாளை(மே.22) காலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு நாள்களிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்த செய்தி மதுபிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டது. அந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.800 கோடிக்கும் மேல் மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டாஸ்மாக்கிற்குப் படையெடுத்த மதுப்பிரியர்கள் - இரண்டு நாளில் ரூ. 854 கோடி வசூல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.