ETV Bharat / city

குடியுரிமை திருத்தச் சட்டம்: கோலமிட்டு மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Dec 31, 2019, 6:32 PM IST

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கோலம் வரைந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

congress
congress

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று கோலம்போடும் போராட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் அதிகமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, திடீரென அவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, “நாம் கடினமாகப் போராடி பெற்ற சுதந்திரத்தை இந்த மோடி அரசிடம் கொடுத்து வீணடித்துவிட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக நாட்டை மதரீதியாகப் பிளக்கும் மோடி அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மோடியும் அமித்ஷாவும் உணர வேண்டும்“ எனக் கூறினார்.

நாட்டை மதரீதியாக பிளக்கும் மோடி அரசு - மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகரில் நேற்று முன்தினம் கோலம் வரைந்த ஆறு பெண்கள் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடப்பட்டது.

இதையும் படிங்க: வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று கோலம்போடும் போராட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் அதிகமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, திடீரென அவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, “நாம் கடினமாகப் போராடி பெற்ற சுதந்திரத்தை இந்த மோடி அரசிடம் கொடுத்து வீணடித்துவிட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக நாட்டை மதரீதியாகப் பிளக்கும் மோடி அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மோடியும் அமித்ஷாவும் உணர வேண்டும்“ எனக் கூறினார்.

நாட்டை மதரீதியாக பிளக்கும் மோடி அரசு - மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெசன்ட் நகரில் நேற்று முன்தினம் கோலம் வரைந்த ஆறு பெண்கள் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இதைக் கண்டித்து திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நேற்று குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போடப்பட்டது.

இதையும் படிங்க: வேண்டாம் என்ஆர்சி! வேண்டாம் சிஏஏ! - எதிர்க்கும் கோலங்கள்

Intro:


Body:Visuals


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.