ETV Bharat / city

ஜெயலலிதா பிறந்தநாள்: மரக்கன்றுகள் நடும் விழா - முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகம் எதிரே உள்ள பொதுப்பணித்துறை மைதானத்தில் தொடங்கி வைத்தார்.

author img

By

Published : Feb 24, 2020, 12:27 PM IST

birthday
birthday

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடந்த இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், இதுவரை 4.7 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் வனப் பரப்பளவு அதிகரித்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

ஜெயலலிதா பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் விழா - முதலமைச்சர் பங்கேற்பு

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரக்கன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி இந்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளில் பள்ளிகளில் உறுதிமொழி

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடந்த இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 72 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில், இதுவரை 4.7 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் வனப் பரப்பளவு அதிகரித்துள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

ஜெயலலிதா பிறந்தநாள் மரக்கன்றுகள் நடும் விழா - முதலமைச்சர் பங்கேற்பு

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மரக்கன்றை நட்டு, தண்ணீர் ஊற்றி இந்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா பிறந்தநாளில் பள்ளிகளில் உறுதிமொழி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.