சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோயிலுக்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கோயிலில் வழிபாடு செய்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
உச்சநீதிமன்றத்தில் பிராந்திய மொழிகளில் அறிக்கை வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அதே சமயத்தில் தமிழ் மொழிக்கும் முக்கியத்துவத்தை தந்திருக்க வேண்டும். ஏனென்றால் அனைத்து மொழிகளையும் விட தமிழ் முதன்மையானது. எங்களின் கோரிக்கை படி அடுத்த அறிவிப்பில் தமிழ் மொழியிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.
இந்தியா முழுவதும் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து முழுமையாக தெரியாமல் வைகோ குற்றம்சாட்டி வருகிறார். தமிழ்நாட்டு மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
கட்சியின் தலைவராக இருக்கக் கூட தகுதி இல்லாத ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்ததற்கு ஸ்டாலின், மக்களிடம் பதிலளிக்க வேண்டும். மேலும் அதற்கு ஸ்டாலின் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.