ETV Bharat / city

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி - வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு

author img

By

Published : Jul 9, 2022, 12:12 PM IST

ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசு
அரசு

சென்னை: தமிழ்நாட்டில் ஏரிகளிலும், குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார். இந்நிலையில் ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் விதமாக நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

முன்னதாக முதலமைச்சர் இது தொடர்பாக வெளியிட்ட அந்த ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று "ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று எடுத்துக்கொள்ள தொழில் துறை, நீர்வள ஆதாரத் துறையின் ஒத்துழைப்புடன், விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினைத் திறம்பட மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், விவசாய நிலங்களின் வளம் கூடி, மகசூல் அதிகரிப்பதுடன், ஏரிகள், குளங்களின் நீர் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும்” என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தொழில் துறையால் அரசாணை (நிலை) எண் 258, நாள் 12-10-2021-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் 1959ஆம் ஆண்டு, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில், விதி 12 (2)-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், ஏரி மற்றும் குளங்கள் உள்ள கிராமத்தில் விவசாய நிலங்களுக்கும் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இலவசமாக மண் எடுத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் வேளாண் பெருமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிட வேண்டும்.

இந்நேர்வில், 20 நாள்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழினைப் பெறத் தேவையில்லை.

வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், அறிவிக்கை செய்யப்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக, விதி 12 (2)-ன்கீழ் அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து, அதனைப் பயன்படுத்தி விவசாய நிலங்களின் மேம்பாடு மற்றும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, வேளாண் பெருமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொப்பரை தேங்காய்களுக்குரிய உரிய விலை வேண்டும் - தேங்காய் உடைத்து நூதன போரட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஏரிகளிலும், குளங்களிலும் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி மண்வளத்தை உயர்த்துவதற்கான விழிப்புணர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார். இந்நிலையில் ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை இலவசமாக மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் விவசாயிகள் எடுத்துப் பயன்படுத்துவதற்கு வழிகாட்டும் விதமாக நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு நேற்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.

முன்னதாக முதலமைச்சர் இது தொடர்பாக வெளியிட்ட அந்த ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று "ஏரிகள், குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியைப் பெற்று எடுத்துக்கொள்ள தொழில் துறை, நீர்வள ஆதாரத் துறையின் ஒத்துழைப்புடன், விவசாய நிலங்களின் வளத்தை உயர்த்தும் வகையில், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாவட்ட ஆட்சியர், தொடர்புடைய துறைகளின் ஒத்துழைப்புடன் இப்பணியினைத் திறம்பட மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், விவசாய நிலங்களின் வளம் கூடி, மகசூல் அதிகரிப்பதுடன், ஏரிகள், குளங்களின் நீர் சேமிக்கும் திறனும் அதிகரிக்கும்” என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையினைத் தாக்கல் செய்து அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, தொழில் துறையால் அரசாணை (நிலை) எண் 258, நாள் 12-10-2021-ல் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) இருந்து விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுத்து, விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தும் வகையில் 1959ஆம் ஆண்டு, தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில், விதி 12 (2)-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி, நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.

மேலும், ஏரி மற்றும் குளங்கள் உள்ள கிராமத்தில் விவசாய நிலங்களுக்கும் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் இலவசமாக மண் எடுத்து வேளாண் பெருமக்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக சம்பந்தப்பட்ட வேளாண் நிலங்களுக்கான 10 (1) சிட்டா அல்லது அடங்கல் நகலுடன் வேளாண் பெருமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்றிட வேண்டும்.

இந்நேர்வில், 20 நாள்களுக்கு மிகாமல், ஏரி மற்றும் குளங்களில் இருந்து நிர்ணயித்த அளவில் வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்படும். ஏரி மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழினைப் பெறத் தேவையில்லை.

வேளாண் பெருமக்கள் பயன்பெறும் வகையில், அறிவிக்கை செய்யப்பட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக, விதி 12 (2)-ன்கீழ் அனுமதி வழங்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், ஏரி மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் எடுத்து, அதனைப் பயன்படுத்தி விவசாய நிலங்களின் மேம்பாடு மற்றும் திறனை அதிகரிக்கும் பொருட்டு, வேளாண் பெருமக்களிடையே போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் (சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர) கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கொப்பரை தேங்காய்களுக்குரிய உரிய விலை வேண்டும் - தேங்காய் உடைத்து நூதன போரட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.