ETV Bharat / city

Today Corono update: 12,895 பேருக்கு கரோனா தொற்று உறுதி!

author img

By

Published : Jan 9, 2022, 10:27 PM IST

Today Corono update: மருத்துவமனைகளில் கடந்த ஒருவாரத்தில் மட்டும் கரோனாவினால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து 135ஆக உயர்ந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா
கரோனா

சென்னை: Today Corono update: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 12,895 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்பினால் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 51ஆயிரத்து 335ஆக உயர்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது

கரோனா தொற்று

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த 27 ஆயிரத்து 81 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 405 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில், 246 நபர்களுக்கு எஸ்.ஜீன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று

வெளிநாடுகளிலிருந்து வந்த 117 நபர்களுக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 68 நபர்கள் என 185 நபர்கள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிகிச்சைப்பெற்ற 179 நபர்களும் 21 மாவட்டங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளா, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 6 நபர்களும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தொற்று எண்ணிக்கை 12,895ஆக உயர்வு

தமிழ்நாட்டில் புதிதாக மேலும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 705 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 12,843 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 8 நபர்களுக்கும், ஓமன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் தலா ஒரு நபர்களுக்கும், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலிருந்து வந்த 4 பேருக்கும் என 12,895 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 75 லட்சத்து 85 ஆயிரத்து 162 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், 28 லட்சத்து 286 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 51 ஆயிரத்து 335 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1,808 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 12 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என 12 நோயாளிகள் இறந்துள்ளனர்.

இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 855 என உயர்ந்துள்ளது.

கிடுகிடுவென உயரும் பாதிப்புகள்

சென்னை மாவட்டத்தில் புதிதாக 6186 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1512 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 608 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 702 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 219 நபர்களுக்கும் திருச்சியில் 275 நபர்களுக்கும் வேலூரில் 295 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 343 நபர்களுக்கும், மதுரையில் 348 நபர்களுக்கும், ராணிப்பேட்டையில் 184 நபர்களுக்கும் மாவட்டங்களில் கரோனா தொற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்யப்படுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் பாதிக்கப்படுபவர்கள் 7.9 விழுக்காடாக உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 15.5 விழுக்காடாகவும் பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டில் 14 விழுக்காடாகவும், ராணிப்பேட்டையில் 12.5% எனவும்,

திருவள்ளூரில் 12.8 விழுக்காடு எனவும், தூத்துக்குடியில் 10.9 விழுக்காடு எனவும், கிருஷ்ணகிரியில் 10 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் நோய்ப்பரவல் விகிதம் 5 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது.

தனிமைப்படுத்தும் மையங்கள்

நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளின் படுக்கைகள், தற்போது காலியாக உள்ளன.

சென்னை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 193 படுக்கைகள் காலியாக உள்ளன. செங்கல்பட்டில் 1,168 படுக்கைகளும் கோயம்புத்தூரில் சில படுக்கைகளும் காலியாக உள்ளன.

பெரும்பாலான மாவட்டங்களில் படுக்கைகள் காலியாக இருப்பதால் நோய்த்தொற்று அதிகரித்து வந்தாலும் தனிமைப்படுத்தும் மையங்களை மேலும், அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனத்தெரிகிறது.

இதையும் படிங்க: Madurai Curfew: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் தூக்கம் கொண்ட 'தூங்கா நகரம்'

சென்னை: Today Corono update: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் புதிதாக 12,895 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஏற்பட்ட நோய்த்தொற்று பாதிப்பினால் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 51ஆயிரத்து 335ஆக உயர்ந்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது

கரோனா தொற்று

மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த 27 ஆயிரத்து 81 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 405 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இவர்களில், 246 நபர்களுக்கு எஸ்.ஜீன் டிராப் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் தொற்று

வெளிநாடுகளிலிருந்து வந்த 117 நபர்களுக்கும், அவர்களுடன் தொடர்பிலிருந்த 68 நபர்கள் என 185 நபர்கள் ஒமைக்ரான் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிகிச்சைப்பெற்ற 179 நபர்களும் 21 மாவட்டங்களில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கேரளா, புதுச்சேரி, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 6 நபர்களும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தொற்று எண்ணிக்கை 12,895ஆக உயர்வு

தமிழ்நாட்டில் புதிதாக மேலும், ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 705 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 12,843 நபர்களுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வந்த 8 நபர்களுக்கும், ஓமன், இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்களில் தலா ஒரு நபர்களுக்கும், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலிருந்து வந்த 4 பேருக்கும் என 12,895 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 75 லட்சத்து 85 ஆயிரத்து 162 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால், 28 லட்சத்து 286 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 51 ஆயிரத்து 335 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சைப்பெற்று வந்தவர்களில் குணமடைந்த 1,808 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 12 ஆயிரத்து 96 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 8 நோயாளிகளும் என 12 நோயாளிகள் இறந்துள்ளனர்.

இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 855 என உயர்ந்துள்ளது.

கிடுகிடுவென உயரும் பாதிப்புகள்

சென்னை மாவட்டத்தில் புதிதாக 6186 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1512 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் 608 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 702 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 219 நபர்களுக்கும் திருச்சியில் 275 நபர்களுக்கும் வேலூரில் 295 நபர்களுக்கும், காஞ்சிபுரத்தில் 343 நபர்களுக்கும், மதுரையில் 348 நபர்களுக்கும், ராணிப்பேட்டையில் 184 நபர்களுக்கும் மாவட்டங்களில் கரோனா தொற்றின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் பரிசோதனை செய்யப்படுபவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் பாதிக்கப்படுபவர்கள் 7.9 விழுக்காடாக உள்ளது.

ஆனால், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் 15.5 விழுக்காடாகவும் பக்கத்து மாவட்டமான செங்கல்பட்டில் 14 விழுக்காடாகவும், ராணிப்பேட்டையில் 12.5% எனவும்,

திருவள்ளூரில் 12.8 விழுக்காடு எனவும், தூத்துக்குடியில் 10.9 விழுக்காடு எனவும், கிருஷ்ணகிரியில் 10 விழுக்காடாகவும் அதிகரித்துள்ளது. மேலும், பெரும்பாலான மாவட்டங்களில் நோய்ப்பரவல் விகிதம் 5 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளது.

தனிமைப்படுத்தும் மையங்கள்

நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளின் படுக்கைகள், தற்போது காலியாக உள்ளன.

சென்னை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 193 படுக்கைகள் காலியாக உள்ளன. செங்கல்பட்டில் 1,168 படுக்கைகளும் கோயம்புத்தூரில் சில படுக்கைகளும் காலியாக உள்ளன.

பெரும்பாலான மாவட்டங்களில் படுக்கைகள் காலியாக இருப்பதால் நோய்த்தொற்று அதிகரித்து வந்தாலும் தனிமைப்படுத்தும் மையங்களை மேலும், அதிகரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனத்தெரிகிறது.

இதையும் படிங்க: Madurai Curfew: ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் தூக்கம் கொண்ட 'தூங்கா நகரம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.