ETV Bharat / city

தற்கொலை வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பிரபலப்படுத்தக் கூடாது: மனநல மருத்துவர் வேண்டுகோள்

சென்னை: தற்கொலை செய்து கொள்வது போன்ற வீடியோக்களை வாட்ஸ்அப்பில் பிரபலப்படுத்தக் கூடாது என மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனநல மருத்துவர்
author img

By

Published : Sep 10, 2019, 2:11 PM IST

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டு அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தற்கொலைத் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தினை வரைந்தனர்.

அதனைத்தொடர்ந்து அரசு மனநல காப்பகத்தில் புறநோயாளிகள் பிரிவில் உலக தற்கொலைத் தடுப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களின் நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகா, ”ஆண்டுதோறும் உலக தற்கொலைத் தடுப்பு தினம் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். உலக அளவில் ஒவ்வொரு 40 வினாடிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

மனநல மருத்துவர் செய்தியாளர் சந்திப்பு

சமூகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வாழ முடியும். தற்பொழுது வளரிளம் பருவத்தினர் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மொபைல் வாங்கித் தராவிட்டால் தற்கொலைக்கு முயல்வது, குடும்பத்தில் பிரச்னை என்றால் தற்கொலைக்கு முயல்வது என அனைத்திற்கும் தற்கொலை தான் தீர்வு என தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்கொலை எண்ணம் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பத்தில் பணப்பிரச்னை ஏற்பட்டு கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்கும்போதோ, வேலையில்லாமல் இருக்கும்போதோ வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வந்தால் அவர்களில் தாய் அடிக்கடி இறந்துவிடுவேன் என கூறுவதை குழந்தைகள் கேட்கும் பொழுது தற்கொலை எண்ணம் தோன்ற வாய்ப்புள்ளது.

சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் தனிமனிதனுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தாலும் தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே தான் வாழ்க்கைமுறை குறித்த கல்வியைப் பள்ளிகளிலும் கற்பித்து வருகிறோம். தற்கொலை செய்து கொள்பவர்களில் சிலருக்கு மன நோய் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் மன நோய் பிரச்னை இருக்காது.

நமது வாழ்க்கை வாழ்வதற்காகத்தான். ஏதாவது சண்டை என்றாலும் அது நடக்கும்போது எடுத்து வாட்ஸ் ஆப் வீடியோவில் போடுகின்றனர். அதுபோன்ற வீடியோக்களை பிரபலப்படுத்தக்கூடாது. வாழ்க்கை என்பது விளம்பரப்படுத்துவதற்காக அல்ல வாழ்வதற்குத்தான்” என்றார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலைத் தடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டு அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் தற்கொலைத் தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தினை வரைந்தனர்.

அதனைத்தொடர்ந்து அரசு மனநல காப்பகத்தில் புறநோயாளிகள் பிரிவில் உலக தற்கொலைத் தடுப்புதின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களின் நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகா, ”ஆண்டுதோறும் உலக தற்கொலைத் தடுப்பு தினம் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். உலக அளவில் ஒவ்வொரு 40 வினாடிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

மனநல மருத்துவர் செய்தியாளர் சந்திப்பு

சமூகத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வாழ முடியும். தற்பொழுது வளரிளம் பருவத்தினர் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மொபைல் வாங்கித் தராவிட்டால் தற்கொலைக்கு முயல்வது, குடும்பத்தில் பிரச்னை என்றால் தற்கொலைக்கு முயல்வது என அனைத்திற்கும் தற்கொலை தான் தீர்வு என தவறான பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.

தற்கொலை எண்ணம் தோன்றுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பத்தில் பணப்பிரச்னை ஏற்பட்டு கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்கும்போதோ, வேலையில்லாமல் இருக்கும்போதோ வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வந்தால் அவர்களில் தாய் அடிக்கடி இறந்துவிடுவேன் என கூறுவதை குழந்தைகள் கேட்கும் பொழுது தற்கொலை எண்ணம் தோன்ற வாய்ப்புள்ளது.

சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் தனிமனிதனுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தாலும் தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே தான் வாழ்க்கைமுறை குறித்த கல்வியைப் பள்ளிகளிலும் கற்பித்து வருகிறோம். தற்கொலை செய்து கொள்பவர்களில் சிலருக்கு மன நோய் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் மன நோய் பிரச்னை இருக்காது.

நமது வாழ்க்கை வாழ்வதற்காகத்தான். ஏதாவது சண்டை என்றாலும் அது நடக்கும்போது எடுத்து வாட்ஸ் ஆப் வீடியோவில் போடுகின்றனர். அதுபோன்ற வீடியோக்களை பிரபலப்படுத்தக்கூடாது. வாழ்க்கை என்பது விளம்பரப்படுத்துவதற்காக அல்ல வாழ்வதற்குத்தான்” என்றார்.

Intro:தற்கொலை போன்ற வீடியோக்களை
வாட்ஸ் அப்பில் பிரபலபடுத்த கூடாது
மனநல மருத்துவர் வேண்டுகோள்


Body:தற்கொலை போன்ற வீடியோக்களை
வாட்ஸ் அப்பில் பிரபலபடுத்த கூடாது
மனநல மருத்துவர் வேண்டுகோள்

சென்னை,

தற்கொலை போன்ற வீடியோக்களை
வாட்ஸ் அப்பில் பிரபலபடுத்த கூடாது என
மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் உலக தற்கொலை தடுப்பு தினம் இன்று கொண்டாடப்பட்டது.


மனநலம் பாதிக்கப்பட்டு அரசு மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் தற்கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஓவியத்தினை வரைந்தனர்.


அதனைத்தொடர்ந்து அரசு மனநல காப்பகத்தில் புறநோயாளிகள் பிரிவில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்களின் நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் பூர்ண சந்திரிகா, ஆண்டுதோறும் உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. உலகளவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர். ஒவ்வொரு 40 வினாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலை செய்து கொள்பவர்கள் அவர் குடும்பம் மட்டும் அல்லாமல் 135 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு வாழ முடியும். தற்பொழுது வளரிளம் பருவத்தினர் மற்றும் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்கள் மொபைல் வாங்கித் தராவிட்டால் தற்கொலைக்கு முயல்வது, குடும்பத்தில் பிரச்சனை என்றால் தற்கொலைக்கு முயல்வது என அனைத்திற்கும் தற்கொலைதான் தீர்வு என தவறான பாதைக்கு தற்போது சென்று கொண்டிருக்கின்றனர். எனவே தற்கொலை தடுப்பு தினமான இன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மட்டும் முடிவு அல்ல என கூறி வருகிறோம்.

இதேபோல் அரசு மனநல காப்பகம் மருத்துவமனையில் பணிபுரிபவர்களுக்கும் வாரத்தில் இரண்டு நாட்கள் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

தற்கொலை எண்ணம் தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குடும்பத்தில் பணப் பிரச்சினை ஏற்பட்டு கடன் கொடுத்தவர்கள் வந்து கேட்கும்போதோ, வேலையில்லாமல் இருக்கும்போதோ வீட்டில் கணவன் மனைவிக்குள் பிரச்சினை வந்தால் அவர்களில் அம்மா அடிக்கடி இறந்துவிடுவேன் என கூறுவதை குழந்தைகள் கேட்கும் பொழுது தற்கொலை எண்ணம் தோன்ற வாய்ப்புள்ளது.

சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல் தனிமனிதனுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் திறன் குறைந்தாலும் தற்கொலை எண்ணம் தோன்றும். எனவே தான் வாழ்க்கை முறை குறித்த கல்வியை பள்ளியிலும் கற்பித்து வருகிறோம்.
தற்கொலை செய்து கொள்பவர்களில் சிலருக்கு மன நோய் இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் மன நோய் பிரச்சினை இருக்காது.

பணப்பிரச்சினை, வேலை கிடைக்கவில்லை என்பதற்கு எல்லாம் தற்கொலைக்கு முயல்வது என்பது தவறானதாகும். தற்கொலையை தவிர்க்கும் வகையில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவ பிரிவு துவக்கப்பட்டுள்ளது. அரசு மனநல காப்பகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தற்கொலை தடுப்பு மையம் இயங்கி வருகிறது. மனக் குழப்பத்துடன் இங்கு வருபவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் 99 சதவீதம் பேர் உடனடியாக முடிவெடுத்து செய்துகொள்பவர்கள் அல்ல. அவரிடம் 15 முதல் ஒரு மாதம் முன்பு தற்கொலை செய்வதற்கான அறிகுறிகள் தோன்றும். தான் சம்பாதித்த பொருட்களை ஒருவரிடம் எடுத்துக்கொள்ள கூறுவது, அவரின் அன்றாட வாழ்க்கை நடவடிக்கையில் மாற்றம், சரியாக உணவு உட்கொள்ளாமல் உறங்காமல் இருப்பது போன்றவை இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மன நல மருத்துவர் அல்லது மற்றவரிடம் மனம் விட்டு பேச வைக்க வேண்டும்.


நாம் வாழ்வதே பேஸ்புக்கில் போட்டோ போடுவதுதான் என வாழ்ந்து வருகிறோம். செல்பி எடுத்தால் அதில் எத்தனை லைக் விழுகிறது என பார்க்கிறோம். இந்த இலைகளை வைத்து தான் வாழ்க்கை என்ற ஒரு நடைமுறை தற்போது இருந்து வருகிறது. இது தவறான ஒரு யோசனையாகும். நமது வாழ்க்கை வாழ்வதற்காக தான்.
ஏதாவது சண்டை என்றாலும் அது நடக்கும்போது எடுத்து வாட்ஸ் அப் வீடியோவில் போடுகின்றனர். வாழ்க்கை என்பது விளம்பரப்படுத்துவதற்காக அல்ல வாழ்வதற்குத்தான். தனிமனிதன் குறித்தவற்றை பிரபலப்படுத்த கூடாது. அவர்கள் வீடியோ போட்டாலும் அதனை நாம் பிரபலப்படுத்தாமல் அழித்து விடலாம். இதுபோன்ற வீடியோக்களை வாட்ஸப் நிறுவனங்கள் போடாமல் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.