ETV Bharat / city

கடத்தி வரப்பட்ட 290 கிராம் தங்கம் - சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்!

author img

By

Published : Sep 21, 2019, 6:49 PM IST

Updated : Sep 21, 2019, 7:51 PM IST

சென்னை விமான நிலையத்திற்கு தங்கக்கட்டிகள் கடத்திவந்த, மலேசியாவைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவரை, சுங்கத்துறை அலுவலர்கள் கையும் களவுமாகப் பிடித்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் வரவிருப்பதாக, விமானநிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்தனர். அப்போது மலேசியாவிலிருந்து சென்னை வந்தடைந்த விமானம் ஒன்றில் வந்த, சென்னையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (51) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அலுவலர்கள் விசாரித்தனர். அப்போது அலுவலர்களின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக அப்துல் அஜீஸ் பதிலளித்துள்ளார். எனவே சந்தேகம் வலுவடைந்து அவரது உடமைகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஐந்து மின்சார சாக்கெட்டுகள் மற்றும் அவரது ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றில் சிறு சிறுத் துண்டுகளாக தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து, அஜீஸ் கடத்தி வந்திருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தை, சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடமிருந்துப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பிடிபட்ட அப்துல் அஜீஸிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருட்கள் வரவிருப்பதாக, விமானநிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அலுவலர்கள் தீவிரக் கண்காணிப்பில் இருந்து வந்தனர். அப்போது மலேசியாவிலிருந்து சென்னை வந்தடைந்த விமானம் ஒன்றில் வந்த, சென்னையைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (51) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி அலுவலர்கள் விசாரித்தனர். அப்போது அலுவலர்களின் கேள்விக்கு முன்னுக்குப்பின் முரணாக அப்துல் அஜீஸ் பதிலளித்துள்ளார். எனவே சந்தேகம் வலுவடைந்து அவரது உடமைகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, ஐந்து மின்சார சாக்கெட்டுகள் மற்றும் அவரது ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றில் சிறு சிறுத் துண்டுகளாக தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து, அஜீஸ் கடத்தி வந்திருப்பதை அலுவலர்கள் கண்டுபிடித்தனர்.

மொத்தம் 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தை, சுங்கத்துறை அலுவலர்கள் அவரிடமிருந்துப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக பிடிபட்ட அப்துல் அஜீஸிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

Intro:மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Body:மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர். அப்போது மலேசியாவில் இருந்து விமானம் வந்தது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த அப்துல் அஜீஸ்(51) என்பவர் வந்தார். இவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது 5 மின்சார சாகெட், ஜீன்ஸ் பேண்ட் ஆகியவற்றில் சிறு துண்டுகளாக தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். ரூ. 11 லட்சம் மதிப்புள்ள 290 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அப்துல் அஜீசிடம் விசாரித்து வருகின்றனர்.Conclusion:
Last Updated : Sep 21, 2019, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.