ETV Bharat / city

துணை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

author img

By

Published : Dec 27, 2019, 7:33 AM IST

சென்னை: பிரபல தனியார்  தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக நடித்துவரும் ரேகாவின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை, Serial actress husband committed suicide
நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை, Serial actress husband committed suicide

பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து ஜெ.ஜெ. நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இறந்து கிடந்த கோபிநாத் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் கோபிநாத், தொலைக்காட்சி சீரியல் நடிகையும் தொகுப்பாளினியுமான ரேகா என்பவரின் கணவர் என்பதும், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், கோபிநாத்திற்கும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் நேற்றும் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்திற்குச் சென்று வருவதாக கிளம்பிய கோபிநாத், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத் (39). இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியிலுள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இதனிடையே நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்ற ஊழியர்கள் அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கில் சடலமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இதுகுறித்து ஜெ.ஜெ. நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் இறந்து கிடந்த கோபிநாத் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் அவர்கள் விசாரணை மேற்கொண்டதில் கோபிநாத், தொலைக்காட்சி சீரியல் நடிகையும் தொகுப்பாளினியுமான ரேகா என்பவரின் கணவர் என்பதும், அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. மேலும், கோபிநாத்திற்கும் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் நேற்றும் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்திற்குச் சென்று வருவதாக கிளம்பிய கோபிநாத், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தத் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Intro:ஜெஜெ நகரில் துனை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை.Body:ஜெஜெ நகரில் துனை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை. 


பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத்(39), இவர் அண்ணாநகர், டி.வி.எஸ். காலனியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக வேலை செய்து வந்தார். நேற்று


கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விடுமுறை முடிந்து இன்று காலை அலுவலகத்தை திறக்க ஊழியர்கள் வந்தனர். அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் 

இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடினார்கள். இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த கோபிநாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.


 விசாரணையில் கோபிநாத் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு காதலித்து டிவி சீரியல் நடிகையும், தொகுப்பாளினியுமாகிய  ரேகா என்பவரை திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளார். ரேகா பிரபல தனியார்  தொலைக்காட்சி நாடகங்களில் துனை நடிகையாக நடித்து வருகிறார்.


கோபிநாத் கடந்த 6 மாதங்களாக ஜெஜெ நகரில் இயங்கி வரும்  நிறுவனத்தில் வேலை செய்து  வந்ததாகவும்,  கோபிநாத்திற்கு நிறுவனத்தில் வேலை செய்யும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் மேலும் கடன் பிரச்சினையும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று தனது மனைவியிடம் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டதையடுத்து அலுவலகத்திற்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்துள்ளார்.  இந்த அலுவலகத்திற்கு மூன்று சாவிகள் உள்ளது. அதில் ஒரு சாவி கோபிநாத்திடம் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த கோபிநாத் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் மேலும் இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். வேலை செய்த அலுவலகத்தில் உள்ள அறையில் தூக்கு போட்டு இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.