ETV Bharat / city

திமுக என்பது கொலைகளின் கூடாரம்: அமைச்சர் சிவி சண்முகம் ஷாக் ரிப்போர்ட்

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழக்க காரணமானவர்களுக்கு, உரிய தண்டனையை பெற்றுத்தருவது அரசின் நிலைபாடு என சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Jul 2, 2020, 6:23 AM IST

அமைச்சர் சிவி சண்முகம்
அமைச்சர் சிவி சண்முகம்

சென்னை: சாதான்குளம் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இது வழக்கமான ‘லாக்கப் மரணங்கள்' போல் இல்லாமல், காவலர்கள், அரசு மருத்துவர், நீதிபதி, சிறை அலுவலர்கள் என பலர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளும், கவனக்குறைவு புகார்களும் எழுந்திருக்கும் நிலையில், முன்வைக்கப்படும் பலதரப்பட்ட ஐயங்களுக்கு விடை கண்டு, அவர்களில் தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ்நாடு அரசின் முன் நிற்கிறது.

டாஸ்மாக் மீதுதான் அரசுக்கு அக்கறை - கனிமொழி

மேலும் இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேரடியாக கண்காணித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதற்கிடையில் நடைபெற்று இருக்கும் சம்பவத்தின் கடுமை கருதி, எவ்வித ஐயங்களுக்கும் இடம் தந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

உடற்கூறாய்வு முடிவுகள், முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கும் நீதிபதி பாரதிதாசனின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றத்திற்கு உரியவர்களை இனம் கண்டு, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடரவிருக்கிறது.

அதே வேளையில், இவ்வழக்கு விசாரணைக்கு, குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடும், அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாக தோன்றுகிறது. இதற்காக அவரது குடும்ப தொலைகாட்சிகளும், அவர்களின் கூட்டணி கட்சி ஊடகங்களும், அரசின் மீது பழிபோடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.

“திமுகவினர் மது ஆலைளை மூட முடியுமா?” - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அன்று கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை அடித்து கொலை செய்துவிட்டு, பெற்றவர்களை பிடித்து வந்து, தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த இவர்களை விட, பெற்றோரது உன்னதத்தை உணர்ந்தவர்கள் நாங்கள்.

பட்டபகலில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில், பத்திரிகை ஊழியர்கள் மூவரை எரித்து படுகொலை செய்துவிட்டு, இன்று இவர்கள் ஜீவகாருண்யம் பேசுவது, ரத்த காட்டேரி, தான் சுத்த சைவம் என்று சொல்வதற்கு சமம். தி.மு.க. வை வளர்ப்பதற்கு தன் உயரம் தேயத் தேய உழைத்த தா. கிருட்டிணனை, தார் சாலையில் வெட்டி போட்டு நடைபயிற்சியை கொலை பயிற்சியாக்கிய, கொடியவர்களின் கூடாரம், குற்றவாளிகளின் நாற்றங்கால் தான் தி.மு.க என்பதை இந்த நாடறியும்.

திமுகவை இழிவுப்படுத்தும் ஸ்டாலின் - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய, உஸ்மான் சாகித் பல்வாவை, மு.க. ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து பேசினார் என்றும், அதுசமயம் கருணாநிதி பெயரிலான தொலைகாட்சியினைத் தொடங்க தேவையான பெருந்தொகை தி.மு.க-விற்கு தரப்பட்டது என்பதையும், சி.பி.ஐ-யிடம் வாக்குமூலமாக கொடுத்த பெரம்பலூர் சாதிக்பாட்ஷா, அடுத்த இரண்டு நாளிலேயே மர்மமாக இறந்தார் என்றும், “இதற்கு ஸ்டாலின்தான் காரணம். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக” கொலைப்பழி சுமத்திய வைகோவை மறுமாதமே மு.க. ஸ்டாலின் தன்னோடு கூட்டணியில் சேர்த்துக்கொண்டது ஏன்..? எதனை மூடி மறைக்க....?

அதுபோலவே, ஸ்டாலினின் அனைத்து உள் விவகாரங்களையும் அறிந்தவராக, அவரது பதினைந்து வருட நிழல் நண்பராக இருந்த, அண்ணாநகர் ரமேஷ், அவரது மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டபோது, அருகில் இருந்த அண்ணாநகருக்கு செல்லாதவர்கள், இப்போது மட்டும் தன் மகனை E-Pass வாங்காமல், தொற்றுநோய் காலத்தில் தூத்துக்குடி வரை அனுப்பிவைத்தது எதற்காக என்பதை மக்கள் அறிவார்கள்.

’உதயநிதி இ-பாஸ் விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது’ - கே.என்.நேரு

எனவே, அவதூறுகளால் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று கனா காண்பதையும், கணக்கு போடுவதையும், விட்டுவிட்டு, நெறி சார்ந்த அரசியலை மு.க. ஸ்டாலின் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, தர்மத்திற்கு மாறான, தரம்கெட்ட போக்கை இனியும் அவர் தொடருவாரானால், தி.மு.க முகமற்று அழியும் என்பது நிச்சயம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சாதான்குளம் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடுவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தனது அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

இது வழக்கமான ‘லாக்கப் மரணங்கள்' போல் இல்லாமல், காவலர்கள், அரசு மருத்துவர், நீதிபதி, சிறை அலுவலர்கள் என பலர் மீதும் கடும் குற்றச்சாட்டுகளும், கவனக்குறைவு புகார்களும் எழுந்திருக்கும் நிலையில், முன்வைக்கப்படும் பலதரப்பட்ட ஐயங்களுக்கு விடை கண்டு, அவர்களில் தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டிய தலையாய பொறுப்பு தமிழ்நாடு அரசின் முன் நிற்கிறது.

டாஸ்மாக் மீதுதான் அரசுக்கு அக்கறை - கனிமொழி

மேலும் இவ்வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேரடியாக கண்காணித்து உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதற்கிடையில் நடைபெற்று இருக்கும் சம்பவத்தின் கடுமை கருதி, எவ்வித ஐயங்களுக்கும் இடம் தந்துவிடக்கூடாது என்னும் நோக்கத்தோடு, இவ்வழக்கை மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு முடிவெடுத்திருக்கிறது.

உடற்கூறாய்வு முடிவுகள், முதற்கட்ட விசாரணையை தொடங்கி இருக்கும் நீதிபதி பாரதிதாசனின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், குற்றத்திற்கு உரியவர்களை இனம் கண்டு, அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக தொடரவிருக்கிறது.

அதே வேளையில், இவ்வழக்கு விசாரணைக்கு, குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தோடும், அப்பாவி இருவரது இறப்பை வைத்து, அரசியல் ஆதாயம் தேடும் தி.மு.க-வும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் திட்டமிட்டு சூழ்ச்சிகள் செய்வதாக தோன்றுகிறது. இதற்காக அவரது குடும்ப தொலைகாட்சிகளும், அவர்களின் கூட்டணி கட்சி ஊடகங்களும், அரசின் மீது பழிபோடும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதை உணர முடிகிறது.

“திமுகவினர் மது ஆலைளை மூட முடியுமா?” - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அன்று கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்திய அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் உதயகுமாரை அடித்து கொலை செய்துவிட்டு, பெற்றவர்களை பிடித்து வந்து, தங்கள் பிள்ளையே இல்லை என்று சொல்ல வைத்த இவர்களை விட, பெற்றோரது உன்னதத்தை உணர்ந்தவர்கள் நாங்கள்.

பட்டபகலில், மதுரை உயர்நீதிமன்றத்திற்கு எதிரில், பத்திரிகை ஊழியர்கள் மூவரை எரித்து படுகொலை செய்துவிட்டு, இன்று இவர்கள் ஜீவகாருண்யம் பேசுவது, ரத்த காட்டேரி, தான் சுத்த சைவம் என்று சொல்வதற்கு சமம். தி.மு.க. வை வளர்ப்பதற்கு தன் உயரம் தேயத் தேய உழைத்த தா. கிருட்டிணனை, தார் சாலையில் வெட்டி போட்டு நடைபயிற்சியை கொலை பயிற்சியாக்கிய, கொடியவர்களின் கூடாரம், குற்றவாளிகளின் நாற்றங்கால் தான் தி.மு.க என்பதை இந்த நாடறியும்.

திமுகவை இழிவுப்படுத்தும் ஸ்டாலின் - ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய, உஸ்மான் சாகித் பல்வாவை, மு.க. ஸ்டாலின் இரண்டு முறை சந்தித்து பேசினார் என்றும், அதுசமயம் கருணாநிதி பெயரிலான தொலைகாட்சியினைத் தொடங்க தேவையான பெருந்தொகை தி.மு.க-விற்கு தரப்பட்டது என்பதையும், சி.பி.ஐ-யிடம் வாக்குமூலமாக கொடுத்த பெரம்பலூர் சாதிக்பாட்ஷா, அடுத்த இரண்டு நாளிலேயே மர்மமாக இறந்தார் என்றும், “இதற்கு ஸ்டாலின்தான் காரணம். அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக” கொலைப்பழி சுமத்திய வைகோவை மறுமாதமே மு.க. ஸ்டாலின் தன்னோடு கூட்டணியில் சேர்த்துக்கொண்டது ஏன்..? எதனை மூடி மறைக்க....?

அதுபோலவே, ஸ்டாலினின் அனைத்து உள் விவகாரங்களையும் அறிந்தவராக, அவரது பதினைந்து வருட நிழல் நண்பராக இருந்த, அண்ணாநகர் ரமேஷ், அவரது மனைவி, மற்றும் மூன்று பிள்ளைகள் உள்பட ஐந்து பேரும் தற்கொலை செய்து கொண்டபோது, அருகில் இருந்த அண்ணாநகருக்கு செல்லாதவர்கள், இப்போது மட்டும் தன் மகனை E-Pass வாங்காமல், தொற்றுநோய் காலத்தில் தூத்துக்குடி வரை அனுப்பிவைத்தது எதற்காக என்பதை மக்கள் அறிவார்கள்.

’உதயநிதி இ-பாஸ் விவகாரம் அரசியல் ஆக்கப்படுகிறது’ - கே.என்.நேரு

எனவே, அவதூறுகளால் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று கனா காண்பதையும், கணக்கு போடுவதையும், விட்டுவிட்டு, நெறி சார்ந்த அரசியலை மு.க. ஸ்டாலின் இனியாவது கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, தர்மத்திற்கு மாறான, தரம்கெட்ட போக்கை இனியும் அவர் தொடருவாரானால், தி.மு.க முகமற்று அழியும் என்பது நிச்சயம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.