ETV Bharat / city

மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை - ஆவடி மதுபோதையில் ஒருவர் கொலை

ஆவடி: மதுபோதையில் இருந்த ரமேஷ் என்பவரை, அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி: மதுபோதையில் இருந்த ரமேஷ் என்பவரை, மர்ம நபர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி: மதுபோதையில் இருந்த ரமேஷ் என்பவரை, மர்ம நபர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
author img

By

Published : Feb 19, 2020, 4:47 PM IST

சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த பூம்பொழில் நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் புஜ்ஜி என்கின்ற ரமேஷ். ரமேஷுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. மதுபோதைக்கு அடிமையான ரமேஷ் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை

இந்நிலையில் புஜ்ஜி ரமேஷ் தன் வீட்டின் அருகில் உள்ள கறிக்கடையில் சடலமாக கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புஜ்ஜி ரமேஷ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

புஜ்ஜி ரமேஷ் அடிக்கடி பலரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம், அப்படி யாரிடமாவது தகராறில் ஈடுபட்ட போது கொலை நடந்து இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புஜ்ஜி ரமேஷை கொலை செய்த கொலையாளியை தேடிவருகின்றனர்.

இதையும் படிக்க:மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து!

சென்னையில் உள்ள ஆவடியை அடுத்த பூம்பொழில் நகரை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மகன் புஜ்ஜி என்கின்ற ரமேஷ். ரமேஷுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. மதுபோதைக்கு அடிமையான ரமேஷ் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

மதுபோதையில் ஒருவர் அடித்து கொலை

இந்நிலையில் புஜ்ஜி ரமேஷ் தன் வீட்டின் அருகில் உள்ள கறிக்கடையில் சடலமாக கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அருகிலுள்ள டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் புஜ்ஜி ரமேஷ் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

புஜ்ஜி ரமேஷ் அடிக்கடி பலரிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம், அப்படி யாரிடமாவது தகராறில் ஈடுபட்ட போது கொலை நடந்து இருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் புஜ்ஜி ரமேஷை கொலை செய்த கொலையாளியை தேடிவருகின்றனர்.

இதையும் படிக்க:மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞர்கள் - மூன்று கார்கள் மீது மோதி விபத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.