ETV Bharat / city

நீட் தேர்விற்கு ஆதரவு, எதிர்ப்பு என 86,342 மனுக்கள்!

author img

By

Published : Jun 28, 2021, 8:11 PM IST

நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவிற்கு இதுவரை ஆதரவு, எதிர்ப்பு என 86,342 மனுக்கள் வந்துள்ளன. இதுகுறித்த அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் கேட்கப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

நீதிபதி ஏ.கே.ராஜன்
நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய ஒய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் 3ஆவது கூட்டம் இன்று(ஜூன்.28) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், ஏ.கே. ராஜன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவ கல்வித் துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

ஆதரவு, எதிர்ப்பு என 86,342 மனுக்கள்

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே. ராஜன், "நீட் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு தரப்பிலும் கருத்துகள் உள்ளன. இதுவரை 86,342 பேர் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எந்த கருத்துகள் அதிகமாக வந்துள்ளன என்று தற்போது கூற முடியாது.

அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். அடுத்த திங்கள்கிழமை மாலை (ஜூலை.6) நான்காவது கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அரசு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த கால அவகாசம் தேவைப்பட்டால் அதிகரித்து கேட்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுவோம்

அதைத்தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மருத்துவக் கல்வி ஆணையத்திடம் மட்டுமே கருத்து தெரிவிக்கவேண்டும் என்று இந்தக் குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதனடிப்படையில் செயல்படுவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவினருக்குத் தகுதி இல்லை - சொல்கிறது காங்கிரஸ்

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆராய ஒய்வுப்பெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் 3ஆவது கூட்டம் இன்று(ஜூன்.28) சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், ஏ.கே. ராஜன், மருத்துவத்துறைச் சிறப்பு செயலர் செந்தில்குமார், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவர்கள் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவ கல்வித் துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் வசந்தாமணி உள்ளிடோர் கலந்துகொண்டனர்.

ஆதரவு, எதிர்ப்பு என 86,342 மனுக்கள்

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன்

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஏ.கே. ராஜன், "நீட் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான மனுக்கள் வந்துள்ளன. ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டு தரப்பிலும் கருத்துகள் உள்ளன. இதுவரை 86,342 பேர் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. எந்த கருத்துகள் அதிகமாக வந்துள்ளன என்று தற்போது கூற முடியாது.

அனைத்து கருத்துகளையும் ஆராய்ந்த பின்னரே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். அடுத்த திங்கள்கிழமை மாலை (ஜூலை.6) நான்காவது கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய அரசு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது. இந்த கால அவகாசம் தேவைப்பட்டால் அதிகரித்து கேட்க வாய்ப்புள்ளது" என தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் செயல்படுவோம்

அதைத்தொடர்ந்து பேசிய அவர், "நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மருத்துவக் கல்வி ஆணையத்திடம் மட்டுமே கருத்து தெரிவிக்கவேண்டும் என்று இந்தக் குழுவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதனடிப்படையில் செயல்படுவோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் குறித்து கேள்வி எழுப்ப அதிமுகவினருக்குத் தகுதி இல்லை - சொல்கிறது காங்கிரஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.