ETV Bharat / city

இடஒதுக்கீடு விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டக் கோரிக்கை! - Ravindranath

சென்னை: 27 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்ட சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்
author img

By

Published : Nov 22, 2019, 7:57 PM IST

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இளநிலை, முதுநிலை ஆகிய மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மாநில அரசுகள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2007ஆம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக்கல்வி இடங்களில், முன்னேறிய வகுப்பினரே அதிகளவில் சேர்ந்துள்ளனர். இந்த தருணத்தில், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு, அவசர அவசரமாக வழங்கப்படுகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கும், இழப்புக்கும் உள்ளாகின்றனர்.

எனவே, அகில இந்தியத் தொகுப்பில் இளநிலை, முதுநிலை மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இந்த ஒதுக்கீட்டை 52 விழுக்காடாக, உயர்த்த வேண்டும். கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும்.

மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு

இதர பிற்படுத்தப்பட்டோரைப் பாதிக்கும் மிக முக்கியப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே, மாநில அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த, உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” எனக் கூறினார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “இளநிலை, முதுநிலை ஆகிய மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மாநில அரசுகள், அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களிலும் இந்த இட ஒதுக்கீட்டைப் பின்பற்றுவதில்லை.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2007ஆம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக்கல்வி இடங்களில், முன்னேறிய வகுப்பினரே அதிகளவில் சேர்ந்துள்ளனர். இந்த தருணத்தில், முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 விழுக்காடு இட ஒதுக்கீடு, அவசர அவசரமாக வழங்கப்படுகிறது. இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கும், இழப்புக்கும் உள்ளாகின்றனர்.

எனவே, அகில இந்தியத் தொகுப்பில் இளநிலை, முதுநிலை மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும். இதர பிற்படுத்தப்பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, இந்த ஒதுக்கீட்டை 52 விழுக்காடாக, உயர்த்த வேண்டும். கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும்.

மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர் சந்திப்பு

இதர பிற்படுத்தப்பட்டோரைப் பாதிக்கும் மிக முக்கியப் பிரச்னையில் தமிழ்நாடு அரசு அமைதி காப்பது கண்டனத்திற்குரியது. ஆகவே, மாநில அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த, உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்” எனக் கூறினார்.

Intro:27 சதவீதம் இட ஒதுக்கீடு விவகாரம்
தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம்Body:சென்னை,
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இள நிலை முது நிலை மருத்துவக் கல்வியில் அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப் பட வில்லை.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே ,இதர பிற்படுத்தப்போருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது.

மாநில அரசுகள் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கும் இடங்களில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

இதனால் இதர பிற்படுத்தப் பட்டோர் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 2007 ஆம் ஆண்டு முதல் கிடைத்திருக்க வேண்டிய மருத்துவக் கல்வி இடங்களில், முன்னேறிய வகுப்பினரே அதிக அளவில் சேர்ந்து
வந்துள்ளனர்.

இந்நிலையில் முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு, மிக அதிகமாக 10 சதவீதம் இட ஒதுக்கீடு, அவசர அவசரமாக வழங்கப்படுகிறது.

இதனால் இதர பிற்படுத்தப்பட்டோர் மிக மோசமான பாதிப்புக்கு,இழப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அகில இந்தியத் தொகுப்பில் ,இளநிலை முதுநிலை, மருத்துவ மற்றும் பல்மருத்துவப் படிப்புகளில்,27 சதவீதம் இட ஒதுக்கீட்டை இதர பிற்படுத்தப் பட்டோருக்கு உடனடியாக மத்திய அரசு வழங்கிட வேண்டும்.இந்த ஒதுக்கீட்டை 52 சதவீதம்,இதர பிற்படுத்தப் பட்டோரின் மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும்.கிரீமிலேயர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை ரத்து செய்ய வேண்டும்.

உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும்.

இதர பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசை வலியுறுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும்.

இதர பிற்படுத்தப் பட்டோரை பாதிக்கும் மிக முக்கியப் பிரச்சினையில் தமிழக அரசு ,எதையும் செய்யாமல் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.
தமிழக அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறி வகுப்பினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்து கட்சி கூட்டத்தை
கூட்டம் நடத்தப்பட்டது. அதேபோல் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்தவும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்



நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி,வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்களை அழைத்து, தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

போராட்டத்தை கைவிட்டால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்,கோரிக்கைகளை கனிவோடு பரிசீலிக்கத் தயார் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் , மக்கள் நல்வாழ்வுத் துறை
அமைச்சர் ஏமாற்றுவது நேர்மையற்றச் செயலாகும்.

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்ட அரசு மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ,இட மாறுதல்கள் அனைத்தையும் தமிழக முதல்வர் ரத்து செய்ய வேண்டும்.

போராட்டத்தில் ஈடு பட்ட மருத்துவர்களை இடமாறுதல் செய்து,அந்த இடங்களில் வேறு மருத்துவர்களை நியமனம் செய்ததில் , ஊழல்கள் முறைகேடுகள் பெரிய அளவில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.இது குறித்து மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.



போராட்டத்தை கைவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, தான் அளித்த வாக்குறுதியை ,மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மீறி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் 6 மருத்துவ கல்லூரியை துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவ கல்லூரி துவங்குவதற்கு மத்திய அரசுடன் ஒப்பந்தம் போட வேண்டியதில்லை. எனவே அந்த ஒப்பந்தம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

மத்திய அரசு 6 மருத்துவக்கல்லூரியை துவக்கியப் பின்னர் தனியாருக்கு அளிக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே இது குறித்து தெளிவாக விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.