ETV Bharat / city

ரேபிடோ செயலி வழக்கு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை! - chennai high cort

சென்னன: இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்தும் ரேபிடோ செயலிக்கு தடைவிதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

prohibition extension
author img

By

Published : Aug 20, 2019, 2:46 PM IST

இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்துகிறது ரேபிடோ செயலி. இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப்படி சொந்த வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது. இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த விதிமுறை இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூகுள், ஆப்பிள் இணையதள சேவையிலிருந்து இந்தச் செயலியை நீக்குமாறு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.

காவல் துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு விதிமுறைகளை உருவாக்கும் வரை, ரேபிடோ செயலியை அனுமதிக்க முடியாது எனக் கூறி தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டார்.

rapido application case Extension of Prohibition  ரெபிடோ செயலி வழக்கு தடை நீட்டிப்பு
ரேபிடோ செயலி தடை உத்தரவுக்கு தடை நீட்டிப்பு
இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருசக்கர வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை வகுக்க இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டும். அதனால் வழக்கை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அதுவரை ரேபிடோ செயலி தமிழ்நாட்டில் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை இந்த உத்தரவு தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு விதிமுறைகளை விரைவாக வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்துகிறது ரேபிடோ செயலி. இந்நிலையில், மோட்டார் வாகனச் சட்டப்படி சொந்த வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்தக் கூடாது. இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த விதிமுறை இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கூகுள், ஆப்பிள் இணையதள சேவையிலிருந்து இந்தச் செயலியை நீக்குமாறு சென்னை மாநகர காவல் துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.

காவல் துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு விதிமுறைகளை உருவாக்கும் வரை, ரேபிடோ செயலியை அனுமதிக்க முடியாது எனக் கூறி தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டார்.

rapido application case Extension of Prohibition  ரெபிடோ செயலி வழக்கு தடை நீட்டிப்பு
ரேபிடோ செயலி தடை உத்தரவுக்கு தடை நீட்டிப்பு
இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி. கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருசக்கர வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை வகுக்க இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டும். அதனால் வழக்கை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அதுவரை ரேபிடோ செயலி தமிழ்நாட்டில் செயல்பட தடைவிதிக்க வேண்டும் என வாதிட்டார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும்வரை இந்த உத்தரவு தொடரும் எனவும் தமிழ்நாடு அரசு விதிமுறைகளை விரைவாக வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கை இரண்டு மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
Intro:nullBody:இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்தும் ரேபிடோ செயலிக்கு தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டப்படி சொந்த வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்தக்கூடாது. இருசக்கர வாகனத்தை வாடகை சேவைக்கு பயன்படுத்த விதிமுறை இயற்றப்படாததால்,
கூகுள் மற்றும் ஆப்பிள் இணையதள சேவையில் இருந்து நீக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பரிந்துரை செய்தார்.

காவல்துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், இருசக்கர வாகன பின் இருக்கையை வாடகைக்கு பயன்படுத்துவதற்கு தமிழக அரசு விதிமுறைகளை உருவாக்கும் வரை, ரேபிடோ செயலியை அனுமதிக்க முடியாது என கூறி தடையை நீக்க முடியாது என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சி.வி. கார்த்திகேயன் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இருசக்கர வாகனத்தை வணிகரீதியில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் புதிய விதிமுறைகளை வகுக்க இரண்டு மாத காலம் அவகாசம் வேண்டும். அதனால் வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் அதுவரை ரேபிடோ செயலி தமிழகத்தில் செயல்பட தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதை ஏற்காத நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீதிமன்றத்தின் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரும் வரை தொடரும், மேலும் தமிழக அரசு விதிமுறைகளை விரைவாக வகுக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.