ETV Bharat / city

சசிகலாவை ஆணையம் மீண்டும் அழைக்காது - வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்

author img

By

Published : Mar 23, 2022, 6:43 AM IST

சசிகலா 2018, மார்ச் 9ஆம் தேதி அன்றே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், மீண்டும் அவரை ஆணையம் விசாரணைக்கு அழைக்காது என நம்புவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராஜா செந்தூர் பாண்டியன்
ராஜா செந்தூர் பாண்டியன்

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2ஆவது நாளாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 22) ஆஜராகி, தனது விளக்கத்தை அளித்தார். அவரிடம், ஆணையம் தரப்பு விசாரணை, சசிகலா தரப்பு விசாரணை மற்றும் அப்பல்லோ தரப்பு விசாரணை என மூன்று தரப்பிலும் விசாரணை நடைபெற்றது.

விசாரணை நிறைவடைந்த பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ்-க்கு முன்பு ஆணைய சாட்சியாக 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர். மனுதாரர் சாட்சியாக ஏழு பேர் விசாரிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குற்றச்சாட்டுகளை நீக்கவே ஆணையம்

முதல் கேள்வியாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டேன். அதற்கு ஓபிஎஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார். அடுத்த கேள்வியாக, நீதி கோரியவர் நீங்களே, ஆணையம் அமைக்க உத்தரவு போட்டதும் நீங்களே, அதே ஆணையத்தில் கடைசி சாட்சியாக பங்கேற்றுள்ளீர்கள் என்று கேட்டபோது பெருவாரியான மக்களுக்கு சந்தேகம் இருந்ததால், நானும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆணையம் அமைத்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஒராண்டுக்கு முன், அதாவது 2021, ஜனவரி 23 அன்று தனியார் தொலைக்காட்சியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, 'வி.கே.சசிகலா மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை களையும் வண்ணம் நீதி விசாரணை வேண்டுமென கேட்டேனே தவிர, எந்த காலத்திலும் அவர் மீது சந்தேகம் இல்லை' என்று சொன்னதை மேற்கோள் காண்பித்து கேட்டேன். ஆம், அதே நிலைப்பாட்டில்தான் உள்ளேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஓய்வு எடுக்க முடியாது - ஜெ

இரண்டு கட்டமாக, இந்த ஆணைய விசாரணை பார்க்கப்பட்டது. 2016, செப். 22-க்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன, என்னென்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், என்ன காரணத்தினால் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். 2016, செப். 22 முதல் டிச.5 வரை அவருக்கு என்ன விதமான சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எண்ணற்ற சாட்சிகளிடம் கேள்வி கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையை சேர்ந்த 12 மருத்துவர்கள், ஏற்கனவே போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்தவர்கள். ஆனால் அந்த மருத்துவர்கள் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆணையமும் அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவில்லை, அவர்களும் இதைப் பற்றி சொல்லவில்லை. அவர்களையெல்லாம் திரும்ப அழைத்து, என்ன மாதிரியான சிகிச்சை கொடுக்கப்பட்டது, யாரிடம் பேசினீர்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு என்ன குறைபாடு என கூறினாரா என கேட்டு பதிவு செய்து இருந்தேன்.

அதை ஓபிஎஸ்-யிடம் தெரிவித்து கேட்டபோது, மக்கள் பணியில் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாது என்று கூறியது குறித்தும், 2016 மே மாதம், 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதே ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை எடுத்துரைத்து சந்தேகம் உள்ளதா என்று ஒபிஎஸ்-யிடம் கேட்டேன்.

ஆணையம் தரப்பு சாட்சிகள்

2014 பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து மருத்துவர்களிடம் சிகிச்சையின் போது ஜெயலலிதா தெரிவித்தது சாட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நான் கூறினேன்.

ஓபிஎஸ், இன்று எந்த வித குறைபாடோ, வேறுபாடோ, முரண்பாடோ, சசிகலாவிற்கு எதிரான குற்றச்சாட்டாகவோ எதுவும் பதிவு செய்யவில்லை. அவருடைய சாட்சியம் இன்றுடன் முடிவடைந்தது. ஆணையம் தரப்பின் அனைத்து சாட்சிகளும் முடிவுற்றது. 2016, டிச. 29-இல் சசிகலாவை நான் தான் பொது செயலாளராக முன் மொழிந்தேன் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் ஜார்ஜ், தாமரைக்கண்ணன், பொன்மானிக்கவேல், சத்தியமூர்த்தி, ராமானுஜம், பூஜாரி ஆகியோரை ஆணையம் அழைத்து விசாரித்தபோது 2011 - 2012 காலகட்டத்தில் சசிகலா மற்றும் சசிகலாவை சார்ந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்களா, அது தொடர்பாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா, அது ஜெயலலிதாவிடம் கூறினீர்களா என கேட்டபோது, அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை என கூறினர்.

ஓபிஎஸ்-விடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில், இது எனக்கு நினைவில் இல்லை, இது சரி, இது உண்மைதான் என கூறினார். சசிகலா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக கூறினார். சசிகலா, 2018, மார்ச் 9 அன்றே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டார், மீண்டும் அவரை ஆணையம் விசாரணைக்கு அழைக்காது என்றே நினைக்கிறேன்" என ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை - ஓபிஎஸ்

சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 2ஆவது நாளாக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 22) ஆஜராகி, தனது விளக்கத்தை அளித்தார். அவரிடம், ஆணையம் தரப்பு விசாரணை, சசிகலா தரப்பு விசாரணை மற்றும் அப்பல்லோ தரப்பு விசாரணை என மூன்று தரப்பிலும் விசாரணை நடைபெற்றது.

விசாரணை நிறைவடைந்த பின்னர், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஓபிஎஸ்-க்கு முன்பு ஆணைய சாட்சியாக 148 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு இருந்தனர். மனுதாரர் சாட்சியாக ஏழு பேர் விசாரிக்கப்பட்டிருந்தனர். ஏராளமான ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குற்றச்சாட்டுகளை நீக்கவே ஆணையம்

முதல் கேள்வியாக உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று கேட்டேன். அதற்கு ஓபிஎஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் சந்தேகம் ஏதும் இல்லை என்றார். அடுத்த கேள்வியாக, நீதி கோரியவர் நீங்களே, ஆணையம் அமைக்க உத்தரவு போட்டதும் நீங்களே, அதே ஆணையத்தில் கடைசி சாட்சியாக பங்கேற்றுள்ளீர்கள் என்று கேட்டபோது பெருவாரியான மக்களுக்கு சந்தேகம் இருந்ததால், நானும் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் ஆணையம் அமைத்ததாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஒராண்டுக்கு முன், அதாவது 2021, ஜனவரி 23 அன்று தனியார் தொலைக்காட்சியில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, 'வி.கே.சசிகலா மீது எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை களையும் வண்ணம் நீதி விசாரணை வேண்டுமென கேட்டேனே தவிர, எந்த காலத்திலும் அவர் மீது சந்தேகம் இல்லை' என்று சொன்னதை மேற்கோள் காண்பித்து கேட்டேன். ஆம், அதே நிலைப்பாட்டில்தான் உள்ளேன் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

ஓய்வு எடுக்க முடியாது - ஜெ

இரண்டு கட்டமாக, இந்த ஆணைய விசாரணை பார்க்கப்பட்டது. 2016, செப். 22-க்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனில் கொடுக்கப்பட்ட சிகிச்சை முறை என்ன, என்னென்ன நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், என்ன காரணத்தினால் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டார். 2016, செப். 22 முதல் டிச.5 வரை அவருக்கு என்ன விதமான சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக எண்ணற்ற சாட்சிகளிடம் கேள்வி கேட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போலோ மருத்துவமனையை சேர்ந்த 12 மருத்துவர்கள், ஏற்கனவே போயஸ் கார்டனில் சிகிச்சை அளித்தவர்கள். ஆனால் அந்த மருத்துவர்கள் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆணையமும் அவர்களிடம் இதைப் பற்றி கேட்கவில்லை, அவர்களும் இதைப் பற்றி சொல்லவில்லை. அவர்களையெல்லாம் திரும்ப அழைத்து, என்ன மாதிரியான சிகிச்சை கொடுக்கப்பட்டது, யாரிடம் பேசினீர்கள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு என்ன குறைபாடு என கூறினாரா என கேட்டு பதிவு செய்து இருந்தேன்.

அதை ஓபிஎஸ்-யிடம் தெரிவித்து கேட்டபோது, மக்கள் பணியில் இருப்பதால் ஓய்வு எடுக்க முடியாது என்று கூறியது குறித்தும், 2016 மே மாதம், 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஒரு நாள் முன்பாக உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அப்போதே ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கூறியதை எடுத்துரைத்து சந்தேகம் உள்ளதா என்று ஒபிஎஸ்-யிடம் கேட்டேன்.

ஆணையம் தரப்பு சாட்சிகள்

2014 பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்புக்கு பின் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தது குறித்து மருத்துவர்களிடம் சிகிச்சையின் போது ஜெயலலிதா தெரிவித்தது சாட்சியாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நான் கூறினேன்.

ஓபிஎஸ், இன்று எந்த வித குறைபாடோ, வேறுபாடோ, முரண்பாடோ, சசிகலாவிற்கு எதிரான குற்றச்சாட்டாகவோ எதுவும் பதிவு செய்யவில்லை. அவருடைய சாட்சியம் இன்றுடன் முடிவடைந்தது. ஆணையம் தரப்பின் அனைத்து சாட்சிகளும் முடிவுற்றது. 2016, டிச. 29-இல் சசிகலாவை நான் தான் பொது செயலாளராக முன் மொழிந்தேன் என்றும் ஓபிஎஸ் கூறினார்.

ஐபிஎஸ் அதிகாரிகள் ஜார்ஜ், தாமரைக்கண்ணன், பொன்மானிக்கவேல், சத்தியமூர்த்தி, ராமானுஜம், பூஜாரி ஆகியோரை ஆணையம் அழைத்து விசாரித்தபோது 2011 - 2012 காலகட்டத்தில் சசிகலா மற்றும் சசிகலாவை சார்ந்தவர்கள் ஜெயலலிதாவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார்களா, அது தொடர்பாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா, அது ஜெயலலிதாவிடம் கூறினீர்களா என கேட்டபோது, அப்படி எந்த ஒரு தகவலும் இல்லை என கூறினர்.

ஓபிஎஸ்-விடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கொடுத்த பதில், இது எனக்கு நினைவில் இல்லை, இது சரி, இது உண்மைதான் என கூறினார். சசிகலா மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளதாக கூறினார். சசிகலா, 2018, மார்ச் 9 அன்றே பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டார், மீண்டும் அவரை ஆணையம் விசாரணைக்கு அழைக்காது என்றே நினைக்கிறேன்" என ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை - ஓபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.