ETV Bharat / city

இரிடியம் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி... ஜாமீன் கோரியவரின் மனு ஒத்திவைப்பு

author img

By

Published : Mar 19, 2022, 10:52 AM IST

இரிடியம் மூதலீடு மோசடி வழக்கில், ஜாமீன் கோரியவருடைய மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடபடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

postponement-of-bail-petition-of-a-person-who-swindled-crores-of-rupees-in-iridium-case
postponement-of-bail-petition-of-a-person-who-swindled-crores-of-rupees-in-iridium-case

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பிரபு என்கிற ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, 133 பேரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டார். அதனடிப்படையில், விருதுநகர் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனுக்கு எதிராக பல்லாவரத்தை சேர்ந்த முகமது தமீம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரன் என்னிடம் கூறுகையில், இரிடியத்தை ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்துள்ளேன். அதற்காக தனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. அந்த பணத்தை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி மூலமாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதற்கு 133 பேர் உறுப்பினர்களாக சேரவேண்டும். அதோடு, அதற்காக முதல்கட்டமாக பத்து லட்ச ரூபாயை கட்ட வேண்டும். அப்படி கட்டினால் ஒரு கோடி ரூபாயாக திருப்பி கொடுக்கிறேன் என்று கூறினார். அந்த வகையில் ரூ. 10 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இதேபோல் மொத்தமாக 133 பேரிடம் இருந்து பணம் பெற்று, மோசடி செய்துள்ளார்.

இவர் வெளியேவந்தால் வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு நேற்று நீதிபதி முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: Iridium Scam: ரூ.2.50 லட்சம் கோடியாம்...! - நிஜ ’சதுரங்க வேட்டை’ சம்பவம்; ஒருவர் கைது

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்பிரபு என்கிற ராஜேந்திரன் ஆஸ்திரேலியாவில் இரிடியத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, 133 பேரிடம் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டார். அதனடிப்படையில், விருதுநகர் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த ஜாமீன் மனுக்கு எதிராக பல்லாவரத்தை சேர்ந்த முகமது தமீம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திரன் என்னிடம் கூறுகையில், இரிடியத்தை ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்துள்ளேன். அதற்காக தனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வர வேண்டி உள்ளது. அந்த பணத்தை பெறுவதற்கு ரிசர்வ் வங்கி மூலமாக சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதற்கு 133 பேர் உறுப்பினர்களாக சேரவேண்டும். அதோடு, அதற்காக முதல்கட்டமாக பத்து லட்ச ரூபாயை கட்ட வேண்டும். அப்படி கட்டினால் ஒரு கோடி ரூபாயாக திருப்பி கொடுக்கிறேன் என்று கூறினார். அந்த வகையில் ரூ. 10 லட்சம் ரூபாயை கொடுத்தேன். இதேபோல் மொத்தமாக 133 பேரிடம் இருந்து பணம் பெற்று, மோசடி செய்துள்ளார்.

இவர் வெளியேவந்தால் வழக்கின் சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டார். இந்த வழக்கு நேற்று நீதிபதி முரளி சங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: Iridium Scam: ரூ.2.50 லட்சம் கோடியாம்...! - நிஜ ’சதுரங்க வேட்டை’ சம்பவம்; ஒருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.