ETV Bharat / city

"மக்கள் நீதிமன்றம்" மூலம் ரூ.388.30 கோடி மதிப்பில் நிலுவையிலிருந்த வழக்குகளுக்கு தீர்வு

தமிழ்நாடு முழுவதும் நேற்று டிச.11 தேதி, ஒரே நாளில் நடந்த தேசிய லோக் அதாலத் என்ற "மக்கள் நீதிமன்றங்கள்" மூலமாக 388 கோடியே 30 லட்சத்து 50 அயிரத்து 722 ரூபாய் மதிப்பில் 57,723 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

author img

By

Published : Dec 12, 2021, 9:08 AM IST

Updated : Dec 12, 2021, 12:04 PM IST

மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையிலிருந்த வழக்குகளுக்கு தீர்வு
மக்கள் நீதிமன்றம் மூலம் நிலுவையிலிருந்த வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று டிச.11 ஆம் தேதி தேசிய லோக் அதாலத் என்று அழைக்கப்படும் "மக்கள் நீதிமன்றங்கள்" நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் நீதிமன்றங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு அமர்வுகளும் வழக்குகளைத் தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. இதேபோல, மாவட்ட மற்றும் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம், மாநிலம் முழுவதும் 417 அமர்வுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 49 ஆயிரத்து 586 வழக்குகள், நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 8 ஆயிரத்து 137 வழக்குகள் என்று மொத்தம் 57,723 வழக்குகளுக்கு, ரூ.388 கோடியே 30 லட்சத்து 50 அயிரத்து 722 செலவின மதிப்பிலான தீர்வு காணப்பட்டதாகத் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்றைய லோக் அதாலத்தில், 45 கோடியே 40 லட்சத்து55 ஆயிரத்து 328 ரூபாய் மதிப்பிலான 1,772 காசோலை மோசடி வழக்குகளும், 153 கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 323 ரூபாய் மதிப்பிலான 3,304 மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, 44 கோடியே 93 லட்சத்து ஆயிரத்து 454 ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 334 சிவில் வழக்குகளும், 133 திருமணம் சம்பந்தப்பட்ட வழக்குகளும் இன்றைய லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி - 37 பேர் போட்டி

சென்னை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் நேற்று டிச.11 ஆம் தேதி தேசிய லோக் அதாலத் என்று அழைக்கப்படும் "மக்கள் நீதிமன்றங்கள்" நடத்தப்பட்டது.

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்
தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்கள்

தமிழ்நாட்டிலுள்ள மக்கள் நீதிமன்றங்கள்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இரு அமர்வுகளும் வழக்குகளைத் தீர்வுக்கு எடுத்துக் கொண்டன. இதேபோல, மாவட்ட மற்றும் வட்டார சட்டப் பணிகள் ஆணைக்குழுக்கள் மூலம், மாநிலம் முழுவதும் 417 அமர்வுகளில் மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேலான வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதில், நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள 49 ஆயிரத்து 586 வழக்குகள், நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத 8 ஆயிரத்து 137 வழக்குகள் என்று மொத்தம் 57,723 வழக்குகளுக்கு, ரூ.388 கோடியே 30 லட்சத்து 50 அயிரத்து 722 செலவின மதிப்பிலான தீர்வு காணப்பட்டதாகத் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவிப்பு

அவர் வெளியிட்ட அறிவிப்பில், இன்றைய லோக் அதாலத்தில், 45 கோடியே 40 லட்சத்து55 ஆயிரத்து 328 ரூபாய் மதிப்பிலான 1,772 காசோலை மோசடி வழக்குகளும், 153 கோடியே 28 லட்சத்து 11 ஆயிரத்து 323 ரூபாய் மதிப்பிலான 3,304 மோட்டார் வாகன விபத்து வழக்குகளிலும் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதேபோல, 44 கோடியே 93 லட்சத்து ஆயிரத்து 454 ரூபாய் மதிப்பிலான 7 ஆயிரத்து 334 சிவில் வழக்குகளும், 133 திருமணம் சம்பந்தப்பட்ட வழக்குகளும் இன்றைய லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி - 37 பேர் போட்டி

Last Updated : Dec 12, 2021, 12:04 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.