ETV Bharat / city

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

author img

By

Published : May 31, 2022, 9:32 AM IST

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 6,000 தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/31-May-2022/15431012_a.mp4
மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 8,238 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் பள்ளிகளில் 94 ஆயிரத்து 256 மாணவர்கள் சேர்வதற்கான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

பள்ளியில் உள்ள இடங்களுக்கு குறைவாக விண்ணப்பித்திருந்த மாணவர்களில் தகுதியானவர்கள் பட்டியல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. 8 ஆயிரத்து 234 பள்ளிகளில் 2,234 பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு 28 ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு பள்ளிகளில் சேர்வதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள இடங்களுக்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்த 6 ஆயிரம் பள்ளிகளில் நேற்று (மே.30) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்கள் சேர்ப்பதற்காக நடைபெற்ற குலுக்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், அனைவருக்கும் கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குநர் சண்முகவேல் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பள்ளியில் உள்ள 15 இடங்களுக்கு 210 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் காத்திருப்பு பட்டியலில் 10 மாணவர்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

குலுக்களில் இடங்களை தேர்வு செய்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் வெளிப்படையான முறையில் இடங்கள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும்: இந்திய குடிமைப்பணி தேர்வில் வென்ற சத்ரியா கவின்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 8,238 தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தப் பள்ளிகளில் 94 ஆயிரத்து 256 மாணவர்கள் சேர்வதற்கான இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் சேர்வதற்காக ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 175 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

பள்ளியில் உள்ள இடங்களுக்கு குறைவாக விண்ணப்பித்திருந்த மாணவர்களில் தகுதியானவர்கள் பட்டியல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. 8 ஆயிரத்து 234 பள்ளிகளில் 2,234 பள்ளிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு 28 ஆம் தேதி இடங்கள் ஒதுக்கப்பட்டு பள்ளிகளில் சேர்வதற்கான பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் உள்ள இடங்களுக்கு கூடுதலாக மாணவர்களை சேர்க்க விண்ணப்பித்திருந்த 6 ஆயிரம் பள்ளிகளில் நேற்று (மே.30) குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு

சென்னை மயிலாப்பூரில் உள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தில் மாணவர்கள் சேர்ப்பதற்காக நடைபெற்ற குலுக்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், அனைவருக்கும் கல்வி கூடுதல் உதவி திட்ட இயக்குநர் சண்முகவேல் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பள்ளியில் உள்ள 15 இடங்களுக்கு 210 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் காத்திருப்பு பட்டியலில் 10 மாணவர்கள் தேர்வு செய்து வைக்கப்பட்டுள்ளனர்.

குலுக்களில் இடங்களை தேர்வு செய்த பின்னர் செய்தியாளரிடம் பேசிய பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளியில் வெளிப்படையான முறையில் இடங்கள் ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மக்களுக்கான திட்டங்களை தீட்டி செயல்பட வேண்டும்: இந்திய குடிமைப்பணி தேர்வில் வென்ற சத்ரியா கவின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.