சென்னை: போரூரில் இருந்து வேலூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஸ்ரீபெரும்புதூர் கடக்கும்போது திடீரென பேருந்தின் முன் பக்கத்தில் இருந்து கரும்புவை வெளியாகி உள்ளது.
இதனை கண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். அனைவரும் கீழே இறங்கினர். இதை அடுத்து கரும்புகை தீயாக பேருந்து முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்து காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இரட்டை இலை சின்னத்தை முடக்க கோரி மனு கொடுத்தவருக்கு அபராதம்