ETV Bharat / city

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு கிடையாது - மா. சுப்பிரமணியன் தகவல்

author img

By

Published : Dec 6, 2021, 3:11 PM IST

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

’தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு கிடையாது’- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: ஒமைக்ரான் வேகமாகப் பரவும் தன்மைகொண்டதாக இருந்தாலும், பெரிதாக அச்சப்படத் தேவையில்லை எனவும், தமிழ்நாட்டில் இதுவரை ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்த நடிகர் கமல் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதிய சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும், 35 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனை மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
தீவிர கண்காணிப்பு
பின்னர், செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "கரோனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமைக்ரான் 38 நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ஆபத்து அதிகம் உள்ள 11 நாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை ஆபத்து அதிகம் உள்ள நாடுகளிலிருந்து 28 விமானங்கள் நாள்தோறும் வருகின்றன. மற்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களைச் சேர்த்து மொத்தம் 170 வெளிநாட்டு விமான போக்குவரத்து நாள்தோறும் உள்ளது. ஆபத்து அதிகம் உள்ள நாடுகளிலிருந்து வருவோரில் இதுவரை 5,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டெல்டா வகை கரோனா
இதுவரை வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த ஏழு பயணிகளுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களைக் கண்காணித்துவருகிறோம். அதில் ஆறு பேருக்கு ஏற்கனவே டெல்டா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பேர் நாகர்கோவில் மருத்துவமனையிலும், நான்கு பேர் கிங்ஸ் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டு கண்காணிப்பிலும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
மெகா தடுப்பூசி முகாம்
ஒமைக்ரான் வேகமாகப் பரவும் தன்மை இருந்தாலும், பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் 80.44 விழுக்காட்டினருக்கு முதல் தவணையும், 47.46 விழுக்காட்டினருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும் சனிக்கிழமை 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் மூன்றாவது அலை வரும் எனக் கூறியபோதே குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் தயார்செய்யப்பட்டன. கரோனா காலத்தில் தொடங்கப்பட்ட படுக்கைகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இறப்பு விகிதம்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது தொடர்பாக அங்கு ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம். அந்த மூன்று மாவட்டங்களில் சேர்ந்த தன்னார்வலர்களை இணைத்து அங்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமித்து அங்குள்ள பொதுமக்களைத் தடுப்பூசி போட வைப்பதற்கு ஏற்பாடு செய்யவிருக்கிறோம்.
மேலும், தடுப்பூசி அதிகளவில் போட்ட நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். ரயில்களில் வரும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டியதில்லை. ரயில்களில் வருபவர்களையும் பரிசோதித்து தனிமைப்படுத்தினால் பாதி மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களில்தான் இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
கமலிடம் விளக்கம் கேட்கப்படும்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பொது இடத்திற்கு வந்துள்ளாரே எனக் கேட்டதற்கு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், "கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும்.
பொதுவாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் ஏழு நாள்களும், அதன்பின் ஏழு நாள்களும் என மொத்தம் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

சென்னை: ஒமைக்ரான் வேகமாகப் பரவும் தன்மைகொண்டதாக இருந்தாலும், பெரிதாக அச்சப்படத் தேவையில்லை எனவும், தமிழ்நாட்டில் இதுவரை ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றும் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்த நடிகர் கமல் குறித்தும் விளக்கம் கேட்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

புதிய சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவும், 35 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவும் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனை மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ராதாகிருஷ்ணன், மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

மா. சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பு
தீவிர கண்காணிப்பு
பின்னர், செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "கரோனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமைக்ரான் 38 நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது. ஆபத்து அதிகம் உள்ள 11 நாடுகளிலிருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுவரை ஆபத்து அதிகம் உள்ள நாடுகளிலிருந்து 28 விமானங்கள் நாள்தோறும் வருகின்றன. மற்ற நாடுகளிலிருந்து வரும் விமானங்களைச் சேர்த்து மொத்தம் 170 வெளிநாட்டு விமான போக்குவரத்து நாள்தோறும் உள்ளது. ஆபத்து அதிகம் உள்ள நாடுகளிலிருந்து வருவோரில் இதுவரை 5,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
டெல்டா வகை கரோனா
இதுவரை வெளிநாட்டிலிருந்து தமிழ்நாடு வந்த ஏழு பயணிகளுக்குத் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களைக் கண்காணித்துவருகிறோம். அதில் ஆறு பேருக்கு ஏற்கனவே டெல்டா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இரண்டு பேர் நாகர்கோவில் மருத்துவமனையிலும், நான்கு பேர் கிங்ஸ் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டு கண்காணிப்பிலும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
மெகா தடுப்பூசி முகாம்
ஒமைக்ரான் வேகமாகப் பரவும் தன்மை இருந்தாலும், பெரிதாக அச்சப்படத் தேவையில்லை. தமிழ்நாட்டில் 80.44 விழுக்காட்டினருக்கு முதல் தவணையும், 47.46 விழுக்காட்டினருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும் சனிக்கிழமை 14ஆவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் மூன்றாவது அலை வரும் எனக் கூறியபோதே குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் தயார்செய்யப்பட்டன. கரோனா காலத்தில் தொடங்கப்பட்ட படுக்கைகளையும் சேர்த்து ஒரு லட்சத்து 13 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
இறப்பு விகிதம்
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இது தொடர்பாக அங்கு ஒரு கூட்டம் நடத்த இருக்கிறோம். அந்த மூன்று மாவட்டங்களில் சேர்ந்த தன்னார்வலர்களை இணைத்து அங்கு ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமித்து அங்குள்ள பொதுமக்களைத் தடுப்பூசி போட வைப்பதற்கு ஏற்பாடு செய்யவிருக்கிறோம்.
மேலும், தடுப்பூசி அதிகளவில் போட்ட நாடுகளில் தினசரி பாதிப்பு அதிகமாக இருந்தாலும், இறப்பு மிகவும் குறைவாகவே இருக்கிறது. எனவே தடுப்பூசி அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும். ரயில்களில் வரும் பயணிகளுக்கு ரயில் நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டப் பின்னரே பயணத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டியதில்லை. ரயில்களில் வருபவர்களையும் பரிசோதித்து தனிமைப்படுத்தினால் பாதி மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களில்தான் இருப்பார்கள்" எனத் தெரிவித்தார்.
கமலிடம் விளக்கம் கேட்கப்படும்
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பொது இடத்திற்கு வந்துள்ளாரே எனக் கேட்டதற்கு முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், "கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும்.
பொதுவாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் மருத்துவமனையில் ஏழு நாள்களும், அதன்பின் ஏழு நாள்களும் என மொத்தம் 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.