ETV Bharat / city

முன்னாள் அதிமுக எம்.பி.யின் மனைவி கொலை வழக்கு - தலைமறைவான மகன் கைது! - மனைவிக்கொலை வழக்கு

சென்னை: முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அவர்களது மகன், டெல்லியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிமுக எம்.பி மனைவிக்கொலை வழக்கு-தலைமறைவான மகன் கைது!
author img

By

Published : Jul 30, 2019, 5:35 AM IST

முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம்(63), சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மகன் பிரவீண்(35) வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்றுள்ளார்.

பின்னர் சொத்துப்பிரச்சனை காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி மகன் பிரவீணுக்கும், தாய் ரத்தினத்திற்கும் திரும்பவும் தகராறு ஏற்பட இதில் ஆத்திரமடைந்த பிரவீண், ரத்தினத்தை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில், பிரவீணுக்கு உதவி செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்யஜோதி, அவரது மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 9ஆம் தேதி, காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மூன்று மாதமாக தலைமறைவாக இருந்த மகன் பிரவீண், டெல்லியில் இருப்பதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லி விரைந்த தமிழக தனிப்படை போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்துள்ளனர்.

முன்னாள் அதிமுக எம்பி குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம்(63), சென்னை பெசன்ட் நகரில் உள்ள தனது மகன் பிரவீண்(35) வீட்டிற்கு கடந்த மார்ச் மாதம் சென்றுள்ளார்.

பின்னர் சொத்துப்பிரச்சனை காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி மகன் பிரவீணுக்கும், தாய் ரத்தினத்திற்கும் திரும்பவும் தகராறு ஏற்பட இதில் ஆத்திரமடைந்த பிரவீண், ரத்தினத்தை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரிக்கையில், பிரவீணுக்கு உதவி செய்ததாக அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்யஜோதி, அவரது மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 9ஆம் தேதி, காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த மூன்று மாதமாக தலைமறைவாக இருந்த மகன் பிரவீண், டெல்லியில் இருப்பதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டெல்லி விரைந்த தமிழக தனிப்படை போலீசார் நேற்று மதியம் அவரை கைது செய்துள்ளனர்.

Intro:Body:முன்னாள் அதிமுக எம்பியான குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் ரத்தினம்(63). இவர் சங்ககிரியில் வாழ்ந்து வந்தார். இவர் சென்னை பெசன்ட் நகர் பீச் சாலையில் உள்ள தனது மகன் பிரவீண்(35) வீட்டிற்கு கடந்த 13 ம் தேதி காலை வந்துள்ளார். இரவு இருவருக்கும் இவரது மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மகன் பிரவீண் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

ரத்தினத்தின் மகன் பிரவீண் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வந்தார். அவருக்கு அங்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் சொத்துப் பிரச்சினை காரணமாக பிரவீன் தமிழகம் வந்தார்.

பிரவீண் பெசன்ட் நகர் பீச்சில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்தார். சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாய் ரத்தினம் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து ஏப்ரல் மாதம் 13 ம் தேதி காலை மகனைச் சந்திப்பதற்காக பெசன்ட் நகர் வந்தார்.

சொத்துப் பிரச்னையை பேசித் தீர்க்கும் போது பிரச்சனை பெரிதாக மாறி இருக்கிறது. இதனால் ஏப்ரல் 14 ம் தேதி இரவு பிரவீண் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும் கத்தியால் குத்தியும் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.


இந்த நிலையில் பிரவீணுக்கு உதவி செய்ததாக அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான சத்ய ஜோதி மற்றும் சத்யஜோதியின் மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் 9 ம் தேதி, போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகன் பிரவீண் கடந்த 3 மாதமாக தலைமறைவாக இருந்தார். அவர் டெல்லியில் இருப்பதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து டெல்லி விரைந்த தமிழக தனிப்படை போலீசார் இன்று மதியம் அவரை கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.