ETV Bharat / city

129 நாள்களில் 9 லட்சம் பேர் கைது - தமிழ்நாடு காவல்துறை

author img

By

Published : Jul 31, 2020, 1:24 PM IST

சென்னை: ஊரடங்கை மீறியதாக தமிழ்நாடு முழுவதும் 129 நாள்களில் 9 லட்சத்து 22 ஆயிரத்து 70 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

129 நாட்களில் 9 லட்சத்துக்கு மேற்பட்டோர் கைது - தமிழ்நாடு காவல்துறை
129 நாட்களில் 9 லட்சத்துக்கு மேற்பட்டோர் கைது - தமிழ்நாடு காவல்துறை

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 129 நாள்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 22 ஆயிரத்து 70 பேரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். 6 லட்சத்து 58 ஆயிரத்து 745 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19 கோடியே 26 லட்சத்து 35 ஆயிரத்து 528 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவு செய்து காவல்துறையினர் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 129 நாள்களில் தடையை மீறியதாக 9 லட்சத்து 22 ஆயிரத்து 70 பேரை காவல்துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளனர். 6 லட்சத்து 58 ஆயிரத்து 745 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 19 கோடியே 26 லட்சத்து 35 ஆயிரத்து 528 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.