ETV Bharat / city

அப்துல்கலாம் படத்துக்கு வைகோ மரியாதை - undefined

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வைகோ மரியாதை
author img

By

Published : Jul 27, 2019, 5:39 PM IST

முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது படத்திற்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல் கலாம் ஒரு அறிவியல் மாமேதை என்றும், அவர் தன் மீது அதீத அன்பு வைத்திருந்தவர் எனவும் கூறினார்.

அதேபோல், அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டதில் தனது பங்கு என்ன என்பதை சுட்டிக்காட்டிய வைகோ, அதையெல்லாம் தான் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை எனவும் தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவரும், அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது படத்திற்கு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அப்துல் கலாம் ஒரு அறிவியல் மாமேதை என்றும், அவர் தன் மீது அதீத அன்பு வைத்திருந்தவர் எனவும் கூறினார்.

அதேபோல், அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டதில் தனது பங்கு என்ன என்பதை சுட்டிக்காட்டிய வைகோ, அதையெல்லாம் தான் என்றும் தம்பட்டம் அடித்துக்கொண்டதில்லை எனவும் தெரிவித்தார்.

Intro:Body:முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நான்காவது நினைவு நாளையொட்டி தனதி இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவ படத்திற்கு ம.தி.மு.க பொதுச் செயலாலரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, “அறிவியல் மாமேதை அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள். அவர்கள் என் மீது அளவற்ற அன்பை செலுத்தினார்கள். அவர் குடியரசு தலைவர் ஆனதற்கு நான் காரணம் என்று இதுவரை நான சொன்னதில்லை. யாரை குடியரசு தலைவராக நியமிக்கலாம என்று தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை அழைத்து ஆலோசனை செய்தார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் என்னை அழைத்து நீங்கள் சொல்லுகின்ற கருத்தை தான் வாஜ்பாய் ஏற்றுக்கொள்வார் என்று சொன்னார். மறுநாளே அவர் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்துல் கலாம் குடியரசு தலைவர் ஆனதற்கு நானும் ஒரு காரணம் என்று நான் இதுவரை தம்பட்டம் அடித்து கொண்டதில்லை.

அவர் இரண்டாவது முறை குடியரசு தலைவராக பதவி வகிக்க வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் சென்று கூறினேன். அப்துல் கலாம் அவரின் பதவியேற்பு விழாவிற்கு என்னை அழைக்கவில்லை என்று கூறினார். பிறகு இறுதியில் ஒப்புக்கொண்டார்.

அப்துல் கலாம் மறைந்த போது நான் ராமேஸ்வரம் சென்றிருந்தேன். அங்கு உள்ளே அமர்வதற்கு அ.தி.மு.க அமைச்சர்களுக்கு இடம் அளிக்கப்பட்டது. ஜெயல்லிதா வரவில்லை. அங்கு உள்ளே செல்ல முன்னாள் எம்.பி க்களுக்கெல்லாம் அனுமதியில்லை என்று என்னை தடுத்து நிறுத்திவிட்டனர். பின்னர் கராத்தே பழனிச்சாமி அப்துல் கலாமின் குடும்ப உறுப்பினர் என்பதால் அவருக்கு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது. அதை அவர் என்னிடம் கொடுத்து என்னை உள்ளே அனுப்பி அப்துல் கலாமின் அண்ணன் பக்கத்தில் அமர வைத்தார். இது பார்த்து பொறுக்காத கலெக்டர், ஜெயலலிதா அரசாங்கம் இவர் ஏன் இங்கே உட்கார்ந்துள்ளார் என்று கேட்டனர்,. அவரும் எங்கள் குடும்ப உறுப்பினர் தான் அப்துல் கலாமின் அண்ணன் கூறினார். என்ன காரணம். நரேந்திர மோடி, ராகுல் காந்தி மற்ற பல தலைவர்களை நான் தான் அப்துல் கலாமுக்கு பக்கத்தில் இருந்து அறிமுகம் செய்து வைத்தேன். அவர்மீது உண்மையான பற்று இருந்ததே இதற்கு காரணம்.

ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைக்கு விடுதலைப் புளிகள் மீதான தடையை நீட்டிப்பதற்காக தீர்பாயம் கூடியது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிப்பு கொடுத்தவர்கள் 2014 அம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை என்று கொண்டுவந்துவிட்டனர். நான் 2010 ஆம ஆண்டிலிருந்து ஒவ்வொரு தீர்ப்பாயத்திலிருந்தும் வாதாடி வருகிறேன். விடுதலைப் புளிகளை ஆதரித்ததற்காக வேலூர் சிறையில் 19 மாதம் இருந்தேன். தற்போதும் ஒரு வருட தண்டனையில் பெயிலில் இருக்கிறேன். எனவே எனக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும். நான் வாதத்தில் கலந்துகொள்ள கொள்ள வேண்டும் என்று நேற்று கூடிய தீர்ப்பாயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு கூறினேன். அந்த வகையில் ஆகஸ்ட் 16, 17, 18 தேதிகளில் சென்னையில் விடுதலைப் புளிகள் மீதான தடையை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்ப்பாயம் அமரவுள்ளது. அதில் நான் கலந்துகொண்டு விடுதலைப் புளிகள் மீதான தடையை நீக்குவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய வாதங்களை வைப்பேன்” என்று தெரிவித்தார். Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.