ETV Bharat / city

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு - முதல்வர் வீட்டை முற்றுகையிட ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம்

சென்னை: குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நாடளுமன்றத்தில் வாக்களித்ததற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட இன்று ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

author img

By

Published : Dec 18, 2019, 8:33 PM IST

protest
protest

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்த இந்த முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருப்படங்கள் தீயிட்டுக் கொளுத்தி முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையும் பெருமளவில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியினர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “ குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அதிமுகவும், பாமகவும் வரலாற்று துரோகத்தை செய்துள்ளன. தான் திராவிடக்கட்சி என்றோ, எம் ஜி ஆர், ஜெயலலிதா வழி நடக்கும் கட்சி என்றோ சொல்லும் தார்மீக உரிமையை அதிமுக இழந்துள்ளது. மக்கள் இவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.

இந்தச் சட்டம் முஸ்லிம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. சிறுபான்மையின மக்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துவிட்டது.

மேற்கு வங்கம், புதுச்சேரி போல குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தேசியக் குடிமக்கள் பதிவேட்டை எடுக்க விடக் கூடாது. இது கோரிக்கை தான், இது நடக்க வில்லை என்றால் போராட்டம் இன்னும் வலுப்பெறும் “ எனப் பேசினார்.

முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியினர்

இதையும் படிங்க: திமுகவுடன் கை கோர்க்கும் கமல் ஹாசன்!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்த இந்த முற்றுகை போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உருப்படங்கள் தீயிட்டுக் கொளுத்தி முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையும் பெருமளவில் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் தடுக்கப்பட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியினர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “ குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அதிமுகவும், பாமகவும் வரலாற்று துரோகத்தை செய்துள்ளன. தான் திராவிடக்கட்சி என்றோ, எம் ஜி ஆர், ஜெயலலிதா வழி நடக்கும் கட்சி என்றோ சொல்லும் தார்மீக உரிமையை அதிமுக இழந்துள்ளது. மக்கள் இவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.

இந்தச் சட்டம் முஸ்லிம், ஈழத் தமிழர்களுக்கு எதிரானது. சிறுபான்மையின மக்கள், இலங்கைத் தமிழர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துவிட்டது.

மேற்கு வங்கம், புதுச்சேரி போல குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் என தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தேசியக் குடிமக்கள் பதிவேட்டை எடுக்க விடக் கூடாது. இது கோரிக்கை தான், இது நடக்க வில்லை என்றால் போராட்டம் இன்னும் வலுப்பெறும் “ எனப் பேசினார்.

முதல்வர் பழனிசாமி வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியினர்

இதையும் படிங்க: திமுகவுடன் கை கோர்க்கும் கமல் ஹாசன்!

Intro:Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் தமிழக முதல்வர் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் சென்னையில் நடந்தது. இதற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். முதல்வர், பிரதமர், உள்துறை அமைச்சர் போட்டோவை தீயிட்டுக் கொளுத்தினர்.

மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

குடியுரிமை சட்டத்துக்கு அதிமுக 11 பாமக 1 வாக்கும் அளித்து பாசிச ஆட்சிக்கு ஆதரவு அளித்து தான் திராவிடகட்சி, எம் ஜி ஆர், அம்மா வழி நடக்கும் கட்சி என்ற தார்மீக உரிமை இழந்துள்ளது. மக்கள் இவர்களை மன்னிக்க மாட்டார்கள்.

இந்த சட்டம் முஸ்லிம், ஈழ தமிழர்களுக்கு எதிரானது. தமிழர்களை கொடுமை படுதும் இலங்கை அரசு மீது பொருளாதார தடை, சர்வதேச குற்ற விசாரணை நடத்த தீர்மானம் நிறைவேற்றவே ஜெயலலிதா.

சிறுபான்மையின மக்கள், இலங்கை தமிழர்களுக்கு இந்த அரசு துரோகம் செய்து விட்டது. தேசிய குடியுரிமை மசோதாவை ஏற்க கூடாது.

மேற்கு வங்கம், புதுச்சேரி போல குடியுரிமை சட்டத்தை ஏற்க மாட்டோம் அறிவிக்க வேண்டும். தேசிய குடியுரிமை பதிவேடு எடுக்க விட கூடாது. கோரிக்கை வைக்கிரோம். இதுஇது நடக்க வில்லை என்றால் போராட்டம் வலுப்பெறும் என பேசினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.