ETV Bharat / city

ஒரு படம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் - யஷ்

author img

By

Published : Apr 8, 2022, 11:37 AM IST

ஒரு படம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று கே.ஜி.எஃப் திரைப்பட நடிகர் யஷ் தெரிவித்தார்.

கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை
கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை

சென்னையில் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஏப். 7) நடைபெற்றது. இதில் நடிகர் யஷ், நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் யஷ் கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் வெளியிட்டோம். எனது நண்பரும் நடிகருமான விஷால் வெளியிட்டார். முதல்பாகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டின் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் கடினமான உழைப்பாளிகள். மிகவும் பணிவானவர்கள். இந்த படம் டப்பிங் படம் என்று சுலபமாக சொல்லி விடலாம். ஆனால், மற்ற மொழிகளுக்கு படத்தை டப்பிங் செய்யும் போது படத்தை மீண்டும் எடுத்ததுபோன்று இருக்கும்.

தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். நல்ல படம் பண்ண வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கம். எனக்கு தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியானால் அனைவருடைய பார்வையும் அந்த படத்தின் மீதே இருக்கும். இதே நிலைதான் கர்நாடகாவிலும் இருக்கிறது.

கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை

கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை: ஒரு படம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள். இந்த படத்தில் சாதாரண மனிதர்கள் தங்களது வாழ்க்கையில்படும் கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. கேஜிஎஃப் நடந்த கதை அல்ல, கற்பனை கதை. சட்ட விரோதமான சுரங்கங்கள் எல்லா இடங்களிலும் இருந்துள்ளது.

தமிழ்நாட்டில் கன்னட படங்களுக்குத் வரவேற்புள்ளதை போலவே, கர்நாடகாவிலும் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு உள்ளது. இந்த நேரத்தில் நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. கர்நாடகாவில் தமிழ்ப் படங்களை ரசிக்கிறார்கள். தமிழ் நடிகர்களைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் கேஜிஎஃப்: கேஜிஎஃப் படத்திற்குத் தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகள் கிடைத்தது என்பது குறித்து வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், "ஒரு படத்தை வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பமே. இப்படத்தை வெளியிடுவதில் எந்தவொரு கஷ்டமோ, போராட்டமோ இல்லை.

எங்களுக்கு நல்வாய்ப்பாக ஒருநாள் முன்னதாகவே பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இது ரசிகர்களுக்குச் சந்தோஷமான விஷயம். இரண்டு படத்தையும் பார்த்து மகிழலாம். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்" என்றார்.

இதையும் படிங்க: பீஸ்ட், கேஜிஎஃப் - மோதலா? - நடிகர் யாஷ் விளக்கம்

சென்னையில் கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (ஏப். 7) நடைபெற்றது. இதில் நடிகர் யஷ், நடிகை ஸ்ரீனிதி ஷெட்டி, இயக்குனர் பிரசாந்த் நீல், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது நடிகர் யஷ் கூறுகையில், "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் வெளியிட்டோம். எனது நண்பரும் நடிகருமான விஷால் வெளியிட்டார். முதல்பாகம் மிகப்பெரும் வெற்றிபெற்றது.

தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி. தமிழ்நாட்டின் திரைப்பட தொழில்நுட்ப கலைஞர்கள் கடினமான உழைப்பாளிகள். மிகவும் பணிவானவர்கள். இந்த படம் டப்பிங் படம் என்று சுலபமாக சொல்லி விடலாம். ஆனால், மற்ற மொழிகளுக்கு படத்தை டப்பிங் செய்யும் போது படத்தை மீண்டும் எடுத்ததுபோன்று இருக்கும்.

தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளித்துவருகின்றனர். நல்ல படம் பண்ண வேண்டும் என்பதே எங்களது முதல் நோக்கம். எனக்கு தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும். பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியானால் அனைவருடைய பார்வையும் அந்த படத்தின் மீதே இருக்கும். இதே நிலைதான் கர்நாடகாவிலும் இருக்கிறது.

கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை

கேஜிஎஃப் ஒரு கற்பனைக் கதை: ஒரு படம் நன்றாக இருந்தால் மக்கள் கண்டிப்பாகப் பார்ப்பார்கள். இந்த படத்தில் சாதாரண மனிதர்கள் தங்களது வாழ்க்கையில்படும் கஷ்டங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது. கேஜிஎஃப் நடந்த கதை அல்ல, கற்பனை கதை. சட்ட விரோதமான சுரங்கங்கள் எல்லா இடங்களிலும் இருந்துள்ளது.

தமிழ்நாட்டில் கன்னட படங்களுக்குத் வரவேற்புள்ளதை போலவே, கர்நாடகாவிலும் தமிழ்ப் படங்களுக்கு வரவேற்பு உள்ளது. இந்த நேரத்தில் நாம் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. கர்நாடகாவில் தமிழ்ப் படங்களை ரசிக்கிறார்கள். தமிழ் நடிகர்களைக் கொண்டாடுகிறார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் கேஜிஎஃப்: கேஜிஎஃப் படத்திற்குத் தமிழ்நாட்டில் எத்தனை திரையரங்குகள் கிடைத்தது என்பது குறித்து வினியோகஸ்தரும் தயாரிப்பாளருமான எஸ்.ஆர்.பிரபு கூறுகையில், "ஒரு படத்தை வெளியிடுவது திரையரங்கு உரிமையாளர்களின் விருப்பமே. இப்படத்தை வெளியிடுவதில் எந்தவொரு கஷ்டமோ, போராட்டமோ இல்லை.

எங்களுக்கு நல்வாய்ப்பாக ஒருநாள் முன்னதாகவே பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இது ரசிகர்களுக்குச் சந்தோஷமான விஷயம். இரண்டு படத்தையும் பார்த்து மகிழலாம். இது ஒரு ஆரோக்கியமான விஷயம்" என்றார்.

இதையும் படிங்க: பீஸ்ட், கேஜிஎஃப் - மோதலா? - நடிகர் யாஷ் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.