ETV Bharat / city

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க உத்தரவு - மெட்ராஸ் நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Sep 8, 2021, 6:16 AM IST

சென்னை: மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் "சீர்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 460 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்

இது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பேசுகையில், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் மூலம், 45 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து, இந்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வட மாநிலங்களைச் சேர்ந்த 127 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

சென்னை: மாநில மனநல கொள்கையை அமல்படுத்தக் கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்கக் கோரியும் "சீர்" என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 460 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்

இது குறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பேசுகையில், கீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் மூலம், 45 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது குறித்து திட்டம் வகுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தினர். இதனையடுத்து, இந்த விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வட மாநிலங்களைச் சேர்ந்த 127 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.