ETV Bharat / city

‘பாதுகாகப்பட்ட வேளாண் மண்டலம்’ அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

author img

By

Published : Feb 9, 2020, 11:34 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாமாக அறிவிக்கபட்டதன் பின்னணியும் இம்முடிவின் முக்கியத்துவம் குறித்த கருத்துகள் இதோ...

டெல்டா
டெல்டா

'விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும், காவிரி டெல்டா பகுதிகளை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" செயல்படுத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து இதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றிட ஜெயலலிதா அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்க இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது' என்ற அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை, பல்வேறு அரசியல் தலைவர்கள், சூழியல் ஆர்வளர்கள் என பலரும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தனர். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தொடர்ச்சியாக தனது வரவேற்பை வழங்கிவருகின்றனர். அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முடிவு முதலமைச்சரின் துணிச்சலை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.

கல்லணையில் இருந்து சீறிப்பாயும் காவிரி
கல்லணையில் இருந்து சீறிப்பாயும் காவிரி
ஏன் இது துணிச்சலான முடிவு?
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகப் பார்க்கப்படும் காவிரி டெல்டா பகுதி, தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவையை மட்டும் பாதுகாக்கவில்லை. எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வாழ்வியலாக டெல்டா மண்டலம் விளங்குகிறது. வேளாண்மை, அதன் சார்ந்த வேலை என்பதே இந்தப் பகுதியில் வாழும் மக்களின் ஆதார சுருதியாக விளங்கிவருகிறது. பல்வேறு சமூகக் காரணிகளால் விவசாயத்தை விட்டு பலரும் விலகி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பல்வேறு பெயர்கள் இந்த பகுதி மக்களை சில ஆண்டுகளாக அச்சுறுத்திவருகின்றன. இந்த அச்சுறுத்தல்களில் இருந்து மக்களை ஆற்றுப்படுத்தும் விதமாகவே முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
டெல்டா பாசன விவசாயிகள்
டெல்டா பாசன விவசாயிகள்
பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டல அறிவிப்பின் பயன்கள் என்ன?
2016 ஆண்டுக்குப் பின் எண்ணெய் எடுக்கும் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் மரபு சாரா முறையில் கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எடுப்பதற்கு ஒற்றைச் சாளர அனுமதி போதும் என்ற வேளாண் பெருங்குடி மக்களை பீதியடைச் செய்தது. இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அம்சம் இந்த கொள்கை முடிவில் இருந்து டெல்டா பகுதியை பாதுகாக்கும்.
ஹைட்ரோ கார்பன் போராட்டக் களத்தில் மாணவர்கள்
ஹைட்ரோ கார்பன் போராட்டக் களத்தில் மாணவர்கள்

இதன் மூலம் டெல்டா பகுதிகளில், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேளாண்மை, அதன் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வேளாண்மையை அழிக்கும் விதமான எந்த விதமான திட்டங்களோ, தொழில்களோ இந்த பகுதியில் அனுமதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவிரி வேளாண்மண்டல பாசனபகுதி சுருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் வாழ்வாதரம் விவசாயம்
மக்களின் வாழ்வாதரம் விவசாயம்
இந்த அறிவிப்பு விரைவில் சட்டவடிவம் பெறும்பட்சத்தில், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பும், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் "பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக" மாற்றப்படும், காவிரி டெல்டா பகுதிகளை "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக" செயல்படுத்த சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து இதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றிட ஜெயலலிதா அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்க இவ்வரசு எப்போதும் அனுமதி அளிக்காது' என்ற அறிவிப்பை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை, பல்வேறு அரசியல் தலைவர்கள், சூழியல் ஆர்வளர்கள் என பலரும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தனர். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் தொடர்ச்சியாக தனது வரவேற்பை வழங்கிவருகின்றனர். அதிமுக கூட்டணியைச் சேர்ந்த பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த முடிவு முதலமைச்சரின் துணிச்சலை வெளிப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் வரவேற்றுள்ளனர்.

கல்லணையில் இருந்து சீறிப்பாயும் காவிரி
கல்லணையில் இருந்து சீறிப்பாயும் காவிரி
ஏன் இது துணிச்சலான முடிவு?
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகப் பார்க்கப்படும் காவிரி டெல்டா பகுதி, தமிழ்நாட்டு மக்களின் உணவுத் தேவையை மட்டும் பாதுகாக்கவில்லை. எட்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வாழ்வியலாக டெல்டா மண்டலம் விளங்குகிறது. வேளாண்மை, அதன் சார்ந்த வேலை என்பதே இந்தப் பகுதியில் வாழும் மக்களின் ஆதார சுருதியாக விளங்கிவருகிறது. பல்வேறு சமூகக் காரணிகளால் விவசாயத்தை விட்டு பலரும் விலகி வரும் நிலையில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பல்வேறு பெயர்கள் இந்த பகுதி மக்களை சில ஆண்டுகளாக அச்சுறுத்திவருகின்றன. இந்த அச்சுறுத்தல்களில் இருந்து மக்களை ஆற்றுப்படுத்தும் விதமாகவே முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
டெல்டா பாசன விவசாயிகள்
டெல்டா பாசன விவசாயிகள்
பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டல அறிவிப்பின் பயன்கள் என்ன?
2016 ஆண்டுக்குப் பின் எண்ணெய் எடுக்கும் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் மரபு சாரா முறையில் கச்சா எண்ணெய், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் எடுப்பதற்கு ஒற்றைச் சாளர அனுமதி போதும் என்ற வேளாண் பெருங்குடி மக்களை பீதியடைச் செய்தது. இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற அம்சம் இந்த கொள்கை முடிவில் இருந்து டெல்டா பகுதியை பாதுகாக்கும்.
ஹைட்ரோ கார்பன் போராட்டக் களத்தில் மாணவர்கள்
ஹைட்ரோ கார்பன் போராட்டக் களத்தில் மாணவர்கள்

இதன் மூலம் டெல்டா பகுதிகளில், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வேளாண்மை, அதன் சார்ந்த தொழில்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வேளாண்மையை அழிக்கும் விதமான எந்த விதமான திட்டங்களோ, தொழில்களோ இந்த பகுதியில் அனுமதிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காவிரி வேளாண்மண்டல பாசனபகுதி சுருங்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் வாழ்வாதரம் விவசாயம்
மக்களின் வாழ்வாதரம் விவசாயம்
இந்த அறிவிப்பு விரைவில் சட்டவடிவம் பெறும்பட்சத்தில், தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பும், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரமும் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Intro:Body:

Implications and impacts of Cm's announcement on protected agricultural zone


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.