ETV Bharat / city

"காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும் - முக ஸ்டாலின்

author img

By

Published : May 28, 2022, 9:47 AM IST

வீரதிர செயல்புரிந்த காவல் அதிகாரிகள், காவலர்கள், வீரமரணம் அடைந்த காவலரின் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசால் வழங்குகிற முதலமைச்சர் வீரபதக்கத்துக்கான ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசுகள் வழங்க கூடிய இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்களுக்கு இணையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

"காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும் - முக ஸ்டாலின்
"காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும் - முக ஸ்டாலின்

சென்னை: எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் உட்பட கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 வரை என 322 பதக்கங்கள் 319 காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறந்த போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கினார்.

முன்னதாக காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையும் தமிழக முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து புதிய புதிய தொழிற்சாலைகள் வருகிறது என்றால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதால் தான் என்றும் காவலருக்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு, கரோனா கால ஊக்கத்தொகை 5 ஆயிரம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

எல்லோருக்கும் எடுத்துக்காட்டான திராவிட மாடல் ஆட்சியை தனிழ்நாட்டில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை அமைதிதான். அமைதியான சூழலில்தான் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் - சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அது ஏற்படும்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால்தான். அத்தகைய அமைதி சூழலை காக்க வேண்டும். அதற்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய சிறு சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்த விரும்புகிறேன்.

இதுபோன்ற பதக்கங்கள், வீரதீரச் செயல்களுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு பதக்கங்களாகவும் மாறவேண்டும். காவல்துறை "உங்கள் நண்பன்" என்று சொல்கிறோம். அத்தகைய நண்பர்களாக இருப்பவர்களுக்கும், நண்பர்களாக நடந்து கொள்பவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களின் காவலர்களாக இருந்து மக்களைக் காக்கும் பணியில் சிறந்து விளங்கக் கூடிய காவலர்களைப் பாராட்ட வேண்டும்.

"காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை என்பதை சட்டமன்றத்திலேயே நான் சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஓட்டுமொத்தமாக காவல்துறைக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.

மேலும் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் வீரப்பதக்கங்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசு வழங்கக்கூடிய, குடியரசுத் தலைவர் வீரப் பதக்கத்திற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும். காவலர்களது நலனை அரசு கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பாற்றும். மக்களின் நலனைக் காவலர்களாகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும், என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடி எழுந்து நின்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

சென்னை: எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில், இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழக முதலமைச்சர் பதக்கங்கள் உட்பட கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 வரை என 322 பதக்கங்கள் 319 காவலர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று சிறந்த போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கினார்.

முன்னதாக காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையும் தமிழக முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார். விழாவில் பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து புதிய புதிய தொழிற்சாலைகள் வருகிறது என்றால் தமிழ்நாடு அமைதி பூங்காவாக உள்ளதால் தான் என்றும் காவலருக்கு ஒரு நாள் கட்டாய விடுப்பு, கரோனா கால ஊக்கத்தொகை 5 ஆயிரம் உள்ளிட்ட பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

எல்லோருக்கும் எடுத்துக்காட்டான திராவிட மாடல் ஆட்சியை தனிழ்நாட்டில் வழங்கி வருகிறோம். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி - எல்லார்க்கும் எல்லாம் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில் திட்டங்களை தீட்டி வருகிறோம். இவை அனைத்துக்கும் அடிப்படை அமைதிதான். அமைதியான சூழலில்தான் தொழில் வளர்ச்சியாக இருந்தாலும் - சமூக முன்னேற்றமாக இருந்தாலும் அது ஏற்படும்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றால், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதால்தான். அத்தகைய அமைதி சூழலை காக்க வேண்டும். அதற்குக் குந்தகம் ஏற்படுத்தக்கூடிய சிறு சம்பவமும் நடைபெறக் கூடாது என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்த விரும்புகிறேன்.

இதுபோன்ற பதக்கங்கள், வீரதீரச் செயல்களுக்காக மட்டுமல்ல, பண்பாட்டு பதக்கங்களாகவும் மாறவேண்டும். காவல்துறை "உங்கள் நண்பன்" என்று சொல்கிறோம். அத்தகைய நண்பர்களாக இருப்பவர்களுக்கும், நண்பர்களாக நடந்து கொள்பவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட வேண்டும். மக்களின் காவலர்களாக இருந்து மக்களைக் காக்கும் பணியில் சிறந்து விளங்கக் கூடிய காவலர்களைப் பாராட்ட வேண்டும்.

"காவல்துறை நம் நண்பன்" என்று சொல்லத்தக்க விதத்தில் காவலர்கள் செயல்பட வேண்டும். தமிழ்நாடு அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் இன்னொரு கை காவல்துறை என்பதை சட்டமன்றத்திலேயே நான் சொல்லி இருக்கிறேன். ஒரே ஒரு காவலர் அல்லது ஒரு காவல் நிலையம் தனது கடமையைச் செய்யத் தவறும்போது, அது ஓட்டுமொத்தமாக காவல்துறைக்கே தலைக்குனிவை ஏற்படுத்துகிறது.

மேலும் புதிய காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வரும் முதலமைச்சரின் வீரப்பதக்கங்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் சலுகைகள், ஒன்றிய அரசு வழங்கக்கூடிய, குடியரசுத் தலைவர் வீரப் பதக்கத்திற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை மற்றும் சலுகைகளுக்கு இணையாக வழங்கப்படும். காவலர்களது நலனை அரசு கண்ணும் கருத்துமாகப் பேணிக் காப்பாற்றும். மக்களின் நலனைக் காவலர்களாகிய நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும், என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மோடி எழுந்து நின்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.