ETV Bharat / city

4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்
வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Jan 13, 2021, 3:20 PM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள காணொளியில், மாலத்தீவு, கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர் மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றார்.

பொங்கல் பண்டிகையான நாளை (ஜனவரி 14) மற்றும் ஜனவரி 15ஆம் தேதி அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்தார்.

சென்னை, அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்த புவியரசன், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 28 செ.மீ., மழை பதிவாகியிருப்பதாக தெரிவித்தார். சேத்தியாத்தோப்பில் 21 செ.மீ., மழையும் புவனகிரியில் 20, பாபநாசத்தில் 19, மணிமுத்தாறில் 17, சிதம்பரத்தில் 16, சீர்காழியில் 12, திருவிடைமருதூரில் 11, விருத்தாச்சலத்தில் 10, அம்பாசமுத்திரத்தில் 10, கொள்ளிடம், கும்பகோணத்தில் தலா 9 செ.மீ., மழையும் செந்துறை, நாகப்பட்டினம், பேராவூரணி, தேக்கடி, நன்னிலம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ., மழையும், காட்டுமன்னார் கோயில், ஜெயன்கொண்டம், வலங்கைமான், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., மழையும் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், குமரிக்கடல் பகுதியில் ஜனவரி 13ஆம் தேதி மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்தார். மேலும், ஜனவரி 14ஆம் தேதி லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள காணொளியில், மாலத்தீவு, கன்னியாகுமரி கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழையும், விருதுநகர் மதுரை, தென்காசி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திருப்பூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மிதமான மழையும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்றார்.

பொங்கல் பண்டிகையான நாளை (ஜனவரி 14) மற்றும் ஜனவரி 15ஆம் தேதி அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று தெரிவித்தார்.

சென்னை, அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்த புவியரசன், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் கடந்த 24 மணி நேரத்தில் 28 செ.மீ., மழை பதிவாகியிருப்பதாக தெரிவித்தார். சேத்தியாத்தோப்பில் 21 செ.மீ., மழையும் புவனகிரியில் 20, பாபநாசத்தில் 19, மணிமுத்தாறில் 17, சிதம்பரத்தில் 16, சீர்காழியில் 12, திருவிடைமருதூரில் 11, விருத்தாச்சலத்தில் 10, அம்பாசமுத்திரத்தில் 10, கொள்ளிடம், கும்பகோணத்தில் தலா 9 செ.மீ., மழையும் செந்துறை, நாகப்பட்டினம், பேராவூரணி, தேக்கடி, நன்னிலம் ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ., மழையும், காட்டுமன்னார் கோயில், ஜெயன்கொண்டம், வலங்கைமான், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., மழையும் பதிவாகி இருப்பதாக தெரிவித்தார்.

வானிலை ஆய்வு மையம்

தொடர்ந்து பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர், குமரிக்கடல் பகுதியில் ஜனவரி 13ஆம் தேதி மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்தார். மேலும், ஜனவரி 14ஆம் தேதி லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடலில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.