ETV Bharat / city

9 கிலோ தங்கம் கடத்திய கும்பல் கைது

author img

By

Published : Aug 26, 2021, 9:53 PM IST

துபாயிலிருந்து சென்னை விமானம் நிலையத்திற்கு 9 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கும்பலை காவல் துறையினர் கைது செய்தனர்.

9 கிலோ தங்கம் கடத்திய கும்பல் கைது
9 கிலோ தங்கம் கடத்திய கும்பல் கைது

சென்னை: அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரவணன்(28). இவர் தனியார் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்து வரும் ஓப்ராய் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சரவணன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லாவரம் அருகே அடையாளம் தெரியாத மூவர் சரவணனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.

மேலும் சரவணனின் செல்போன், இருசக்கர வாகனம், அதிலிருந்த எட்டு பார்சல்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து சரவணன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த எட்டு பார்சல்களில் என்ன இருந்தன என சரவணனிடம் காவல் துறையினர் கேட்டனர்.

கொள்ளை நாடகம் அம்பலம்

அதற்கு சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் கேள்விக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தினறிய சரவணன் ஒரு கட்டத்தில் உண்மையை கூறினார்.

அந்த எட்டு பார்சல்களிலும் தங்க கட்டிகள் இருந்ததாக தெரிவித்தார். மேலும், துபாயிலிருந்து விமானத்தில் வந்த தங்க கட்டிகளை, எனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரான் என்பவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லும்போது, எனது நண்பர்களை வரவழைத்து கொள்ளை சம்பபம் நடந்ததுபோல நாடகமாடி அந்த தங்க கட்டிகளை தாங்கள் திருட திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருடன் பணிபுரியும் பிரபுராம் (37) விமான நிலைய சோதனை பிரிவில் பணிபுரியும் முகமது நஷீத் (25) ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி கொண்டே, வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தும் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவி வந்தது தெரியவந்தது.

தங்கம் கடத்தல்

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் முகமது, அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோர் தான் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வழிப்பறி நாடகம் நடத்தி, சரவணனிடமிருந்து எட்டு பார்சல்கள், செல்போன், இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.

அந்த வழிப்பறி நாடகத்தில் பறித்த எட்டு பார்சல்களில் 4 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதோடு அந்த தங்கத்தை பிரபு ராமிடம் ஒப்படைத்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லாவரம் காவல் துறையினர், பிரபு ராமிடம் இருந்த 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஷேக், அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோரையும், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வர செய்த இம்ரான் என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சுங்கத்துறை விசாரணை

இவர்களுக்கு விமான நிலையத்தில் தூய்மை பணியாளா்களாகவுள்ள இளையபெருமாள் என்பவரும் உதவி செய்தது தெரியவந்தது. இதனால், அடுத்து அடுத்த விசாரணையில் இந்த வழிப்பறி, கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரந்து, வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ தங்கம், சுங்கத்துறையினருக்கு தெரியாமல் எவ்வாறு வெளியே சென்றன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதனால், சுங்கத்துறையில் யாராவது இவர்களுக்கு உடைந்தையாக செயல்பட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து சுங்கத்துறை அலுவலர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மியான்மர் டூ சென்னை - கடத்திவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை: அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் சரவணன்(28). இவர் தனியார் விமான நிறுவனங்களுக்கு உணவு சப்ளை செய்து வரும் ஓப்ராய் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சரவணன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லாவரம் அருகே அடையாளம் தெரியாத மூவர் சரவணனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.

மேலும் சரவணனின் செல்போன், இருசக்கர வாகனம், அதிலிருந்த எட்டு பார்சல்கள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இது குறித்து சரவணன் பல்லாவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த எட்டு பார்சல்களில் என்ன இருந்தன என சரவணனிடம் காவல் துறையினர் கேட்டனர்.

கொள்ளை நாடகம் அம்பலம்

அதற்கு சரவணன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், அவர் மீது சந்தேகமடைந்த காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் கேள்விக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தினறிய சரவணன் ஒரு கட்டத்தில் உண்மையை கூறினார்.

அந்த எட்டு பார்சல்களிலும் தங்க கட்டிகள் இருந்ததாக தெரிவித்தார். மேலும், துபாயிலிருந்து விமானத்தில் வந்த தங்க கட்டிகளை, எனது நிறுவனத்தின் உரிமையாளர் இம்ரான் என்பவரிடம் ஒப்படைக்க கொண்டு செல்லும்போது, எனது நண்பர்களை வரவழைத்து கொள்ளை சம்பபம் நடந்ததுபோல நாடகமாடி அந்த தங்க கட்டிகளை தாங்கள் திருட திட்டமிட்டதாகவும் தெரிவித்தார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவருடன் பணிபுரியும் பிரபுராம் (37) விமான நிலைய சோதனை பிரிவில் பணிபுரியும் முகமது நஷீத் (25) ஆகியோரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் சென்னை விமான நிலையத்தில் பணியாற்றி கொண்டே, வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தும் கடத்தல் ஆசாமிகளுக்கு உதவி வந்தது தெரியவந்தது.

தங்கம் கடத்தல்

தொடர்ந்து நடத்திய விசாரணையில், சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷேக் முகமது, அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோர் தான் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வழிப்பறி நாடகம் நடத்தி, சரவணனிடமிருந்து எட்டு பார்சல்கள், செல்போன், இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்தவர்கள் என தெரியவந்தது.

அந்த வழிப்பறி நாடகத்தில் பறித்த எட்டு பார்சல்களில் 4 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது. அதோடு அந்த தங்கத்தை பிரபு ராமிடம் ஒப்படைத்துள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பல்லாவரம் காவல் துறையினர், பிரபு ராமிடம் இருந்த 9 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஷேக், அவரது நண்பர்கள் இஸ்மாயில், மணி ஆகியோரையும், துபாயிலிருந்து தங்கத்தை கடத்தி வர செய்த இம்ரான் என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சுங்கத்துறை விசாரணை

இவர்களுக்கு விமான நிலையத்தில் தூய்மை பணியாளா்களாகவுள்ள இளையபெருமாள் என்பவரும் உதவி செய்தது தெரியவந்தது. இதனால், அடுத்து அடுத்த விசாரணையில் இந்த வழிப்பறி, கடத்தல் நாடகத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரந்து, வெளிநாடுகளிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்புடைய 9 கிலோ தங்கம், சுங்கத்துறையினருக்கு தெரியாமல் எவ்வாறு வெளியே சென்றன என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதனால், சுங்கத்துறையில் யாராவது இவர்களுக்கு உடைந்தையாக செயல்பட்டனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து சுங்கத்துறை அலுவலர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மியான்மர் டூ சென்னை - கடத்திவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.