ETV Bharat / city

சென்னையில் 49 இடங்களில் இலவச வைஃபை - free wifi in important places in chennai

சென்னை: சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு வைஃபை (Wifi) தொடர்பை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

இலவச வைஃபை வசதி
இலவச வைஃபை வசதி
author img

By

Published : Aug 17, 2021, 1:11 PM IST

சென்னையில் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல், அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசர காலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வைஃபை (wifi) தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச வைஃபை பெறுவதற்கு கைப்பேசி எண்ணை பதிவு செய்து OTP மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இலவச wifi இணைப்பு அமைக்கப்பட்டுள்ள இடங்களை பொதுமக்கள் https:/chennaicorporation gov in gcc/images/WiFi Smart Pole.pdf என்ற லிங்கை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:15 ஆண்டு கால காத்திருப்பு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அர்ச்சகர்

சென்னையில் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல், அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசர காலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளை கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வைஃபை (wifi) தொடர்பை பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச வைஃபை பெறுவதற்கு கைப்பேசி எண்ணை பதிவு செய்து OTP மூலம் இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.

இலவச wifi இணைப்பு அமைக்கப்பட்டுள்ள இடங்களை பொதுமக்கள் https:/chennaicorporation gov in gcc/images/WiFi Smart Pole.pdf என்ற லிங்கை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:15 ஆண்டு கால காத்திருப்பு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த அர்ச்சகர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.