இதுகுறித்து அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத்தேர்வு டிசம்பர் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் நடைபெறும். காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடைபெறுகிறது.
அந்த வகையில், 20ஆம் தேதி தேதி தமிழ், 21ஆம் தேதி ஆங்கிலம், 22ஆம் தேதி கணிதம், 23ஆம் தேதி அறிவியல், 24ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறஉள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள்ஸ, மேற்கூறிய அட்டவணையின் படி, தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை 14ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதில், மாணவர்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்தத் தேதியை பதிவு செய்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்லது.
இதையும் படிங்க: தள்ளிப்போகிறதா பொதுத்தேர்வுகள்?