ETV Bharat / city

ஜ.சி.எஃப்.யில் அதிகரிக்கும் போலி போலீஸ் அட்டூழியம்!

சென்னை: சென்னை ஐ.சி.எஃப்.யில் பத்திரிகையாளரிடம் பணம்பறித்த போலி காவலர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போலி போலீஸ்
author img

By

Published : Mar 17, 2019, 7:28 AM IST

ஜ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர் சேகர். தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்துவருகிறார்.இவர் மார்ச் 3ஆம் தேதி சென்னை கேரஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை எடுத்துவிட்டு சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 'டிப் டாப் ஆசாமி' சேகரை வழிமறித்துள்ளார். தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் விசாரணை நடத்தியுள்ளார்.

இதில் அவர், 'காவல் நிலையத்திற்கு வந்து ஒரு கையெழுத்து போட்டு விட்டு போ' என சேகரை அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய சேகர் அவருடன் சென்றுள்ளார். லோகோ ரயில் நிலையம் அருகே சென்றபோது, சேகரிடம் 3,000 ரூபாயை பறித்து அந்நபர் தப்பியுள்ளார்.

இதுகுறித்து சேகர் ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றவியல் ஆய்வாளர் காமேஷ்வரி புகாரை வாங்காமல் ஒரு வார காலத்திற்கு பணம் பறித்தவரை பிடித்து பணத்தை மீட்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே நபர், கேரஜ் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்ததை பார்த்த சேகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் வருவதற்குள் அந்த ஆசாமி தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே காவல் நண்பர்கள் குழுவில் வேலை பார்த்துவந்த தமிழரசன் என்ற நபர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

நேற்று இரவு வண்டலூரில் பதுங்கியிருந்த தமிழரசனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நபரால் அந்த பகுதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்தவர் சேகர். தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்துவருகிறார்.இவர் மார்ச் 3ஆம் தேதி சென்னை கேரஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை எடுத்துவிட்டு சென்றுகொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட 'டிப் டாப் ஆசாமி' சேகரை வழிமறித்துள்ளார். தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர் விசாரணை நடத்தியுள்ளார்.

இதில் அவர், 'காவல் நிலையத்திற்கு வந்து ஒரு கையெழுத்து போட்டு விட்டு போ' என சேகரை அழைத்துள்ளார். இதை உண்மை என நம்பிய சேகர் அவருடன் சென்றுள்ளார். லோகோ ரயில் நிலையம் அருகே சென்றபோது, சேகரிடம் 3,000 ரூபாயை பறித்து அந்நபர் தப்பியுள்ளார்.

இதுகுறித்து சேகர் ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றவியல் ஆய்வாளர் காமேஷ்வரி புகாரை வாங்காமல் ஒரு வார காலத்திற்கு பணம் பறித்தவரை பிடித்து பணத்தை மீட்பதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே நபர், கேரஜ் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்ததை பார்த்த சேகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் வருவதற்குள் அந்த ஆசாமி தப்பிச்சென்றுவிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே காவல் நண்பர்கள் குழுவில் வேலை பார்த்துவந்த தமிழரசன் என்ற நபர் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

நேற்று இரவு வண்டலூரில் பதுங்கியிருந்த தமிழரசனை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.இந்த நபரால் அந்த பகுதியில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

17.03.19
சென்னை
ஆவடி_ஆ.கார்த்திக்


ஜ.சி.எப்.,யில் அதிகரிக்கும் போலி போலீஸ் ,பத்திரிகையாளரிடம் பணம் பறிப்பு



டிப்.டாப்., ஆசாமி போலீஸ் போல் நடித்து பத்திரிகையாளரிடம் பணத்தை பறித்துள்ளான். புகாரை வாங்காமல் போலீசார் விசாரித்த நிலையில் மீண்டும் போலி போலீஸ் நடமாட்டம் அதிகரித்துள்ளது.


ஜ.சி.எப்., பகுதியைச் சேர்ந்தவர், சேகர்; தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.


இவர் கடந்த 3ம் தேதி சென்னை கேரஜ் ரயில் நிலையம் அருகே உள்ள ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணத்தை எடுத்துவிட்டு சென்று கொண்டிருந்தார்.


இதனை நோட்டமிட்ட டிப் டாப் ஆசாமி சேகரை வழிமறித்துள்ளான். தன்னை போலீஸ் என, அறிமுகப்படுத்திக்கொண்ட அவன், விசாரணை நடத்தியுள்ளான்.


இதில், அவன் காவல் நிலையத்திற்கு வந்து ஒரு கையேழுத்து போட்டு விட்டு போ என, சேகரை அழைத்துள்ளான்.


இதை உண்மை என, நம்பிய சேகர், அவனுடன் சென்றுள்ளார். லோகோ ரயில் நிலையம் அருகே சென்ற போது, சேகரிடம் 3000 ரூபாயை பறித்து அவன், தப்பியுள்ளான்.


இதுகுறித்து சேகர் ஜ.சி.எப்., காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். குற்றவியல் ஆய்வாளர் காமேஷ்வரி புகாரை வாங்காமல், ஒரு வார காலத்திற்கு மர்ம ஆசாமியை பிடித்து, பணத்தை மீட்பதாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நேற்று மாலை அதே நபர், கேரஜ் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்ததை பார்த்து சேகர் போலீசாருக்கு தெரிவித்துள்ளார்.


போலீசார் வருவதற்குள் அந்த மர்ம ஆசாமி தப்பினான். ஆனால், சிறிது நேரத்தில், அதே பகுதியில், சேகரை பின்தொடர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் மிரட்டியுள்ளனர்.


இதுகுறித்து  புகாரின் அடிப்படையில் ஜ.சி.எப்., போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே காவல் நண்பர்கள் குழுவில் வேலை பார்த்து வந்த தமிழரசன் என்ற நபர் இது போன்ற சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. இன்று இரவு வண்டலூரில் பதுங்கி இருந்த தமிழரசனை கைது செய்த போலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நபரால் அந்த பகுதியில் பலப்பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  

போலி போலீஸ் அட்டகாசம் தெரிந்தும் போலிசார் கண்டுகொள்வதில்லை எனவும், அந்த கும்பல் பாதிக்கப்பட்ட நபர்கள் புகார் கொடுக்க வந்தால் மிரட்டல் விடுப்பதும் போலீசாரின் மெத்தன போக்கையே காட்டுகிறது என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

VISUAL FTP
SCRIPT MAIL

TN_CHN_01_17_DUPLICATE_POLICE_ROBERY_VIS_TN10021

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.