ETV Bharat / city

தனியார் மயமாகும் சுகாதாரத்துறை - மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை!

author img

By

Published : Jan 11, 2020, 5:42 PM IST

சென்னை: தனியார் மயமாக்கி பொது சுகாதாரத்துறையையே வலுவிழக்கச் செய்ய நிதி ஆயோக் துடிப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசு ஒத்துப் போவதாகவும் மருத்துவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

union
union

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர். ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை தமிழ்நாடு அரசு, நிதி ஆயோக்கின் வற்புறுத்தலால்,கௌரவ மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளது. 11.12.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 1,884 காலி பணியிடங்களை எம்ஆர்பி தேர்வு மூலமாக நிரப்பிட , கடந்த 9.12.2018 இல் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

அதன் மூலம், 856 மருத்துவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1,028 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை. அந்தக் காலி பணியிடங்களில், எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அதை விடுத்து, ஒப்பந்த அடிப்படையிலோ,கௌரவ அடிப்படையிலோ மருத்துவர்களை நியமிக்கக் கூடாது.

அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளுக்கு,கௌரவப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ளவும், அவர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து வழங்கிடவும், மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு அரசு வற்புறுத்துகிறது. வெளிநாட்டினரையும், வெளி மாநிலத்தவரையும், பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முயல்கிறது. இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்த முயற்சியையும் அரசு கைவிட வேண்டும்.

நிதி ஆயோக் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை தனியார் தொடங்கிட அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுகளை நிரபந்தித்து வருகிறது. அது தொடர்பாக வரும் ஜனவரி 21ஆம் தேதி அன்று டெல்லியில் ஒரு கூட்டத்தையும் நடத்த உள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் தனியார்மயமானால், அது இளம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துவிடும். மேலும், பொது சுகாதாரத்துறையையே வலுவிழக்கச் செய்துவிடும். அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் “ என்றார்.

இதையும் படிங்க: மதம் என்பது வழிபாடுக்கு மட்டுமே: வெங்கையா நாயுடு பேச்சு

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர். ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை தமிழ்நாடு அரசு, நிதி ஆயோக்கின் வற்புறுத்தலால்,கௌரவ மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளது. 11.12.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 1,884 காலி பணியிடங்களை எம்ஆர்பி தேர்வு மூலமாக நிரப்பிட , கடந்த 9.12.2018 இல் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.

அதன் மூலம், 856 மருத்துவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1,028 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை. அந்தக் காலி பணியிடங்களில், எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அதை விடுத்து, ஒப்பந்த அடிப்படையிலோ,கௌரவ அடிப்படையிலோ மருத்துவர்களை நியமிக்கக் கூடாது.

அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளுக்கு,கௌரவப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ளவும், அவர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து வழங்கிடவும், மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு அரசு வற்புறுத்துகிறது. வெளிநாட்டினரையும், வெளி மாநிலத்தவரையும், பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முயல்கிறது. இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்த முயற்சியையும் அரசு கைவிட வேண்டும்.

நிதி ஆயோக் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை தனியார் தொடங்கிட அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுகளை நிரபந்தித்து வருகிறது. அது தொடர்பாக வரும் ஜனவரி 21ஆம் தேதி அன்று டெல்லியில் ஒரு கூட்டத்தையும் நடத்த உள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் தனியார்மயமானால், அது இளம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துவிடும். மேலும், பொது சுகாதாரத்துறையையே வலுவிழக்கச் செய்துவிடும். அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் “ என்றார்.

இதையும் படிங்க: மதம் என்பது வழிபாடுக்கு மட்டுமே: வெங்கையா நாயுடு பேச்சு

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 11.01.20

மருத்துவப் பணிநியமன ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கி, காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை...

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் பேட்டியளித்த போது,
தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை தமிழக அரசு, நிதி அயோக்கின் வற்புறுத்தலால்,கௌரவ மருத்துவர்கள் மூலம் நிரப்ப உள்ளது.
11.12.2019 ஆம் நாளிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கையில் இதை உறுதி செய்வதாக உள்ளது. கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிப்பது, கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள உதவி மருத்துவர்களுக்கான (Assistant Sugeon -General) 1884 காலிப்பணியிடங்களை MRB தேர்வு மூலமாக நிரப்பிட ,டிசம்பர் 2018 (9.12.2018 )-ல் எழுத்துத்தேர்வு நடத்தியது.

அதன் மூலம் ,856 மருத்துவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1028 பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை. அவர்களின் இடங்கள் காலியாக உள்ளன.
அந்த காலிப்பணியிடங்களை,
எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்களை ,அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நியமிக்க வேண்டும்.
அதை விடுத்து, மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையிலோ,கௌரவ அடிப்படையிலோ நியமிக்கக் கூடாது.

அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளுக்கு,கௌரவப் பேராசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள மருத்துவர்களுக்கு, ஊதியம் நிர்ணயித்து வழங்கிடவும் ,மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு வற்புறுத்துகிறது.
வெளிநாட்டினரையும்,
வெளி மாநிலத்தவரையும், பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழக அரசு முயல்கிறது.
இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும்.
எனவே, இம் முயற்சியையும் கைவிட வேண்டும்.

நிதி அயோக், மாவட்ட மருத்துவ மனைகளை,பொது தனியார் பங்களிப்பின் அடிப்படையில் (PPP model), மருத்துவக் கல்லூரிகளை தனியார் தொடங்கிட, வழங்கிட வேண்டும் என மாநில அரசுகளை நிரபந்தித்து வருகிறது.
அது தொடர்பாக வரும் ஜனவரி 21 அன்று டெல்லியில் நிதி அயோக் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது. நிதி அயோக்கின் நிர்பந்தங்களுக்கு தமிழக அரசு அடிபணிந்து வருவது கவலை அளிக்கிறது.
மாவட்ட மருத்துவமனைகள் தனியார் மயமானால், அது இளம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துவிடும். அது பொது சுகாதாரத்துறையை வலுவிலக்கச் செய்துவிடும். அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.
எனவே, இத்தகைய தனியார் மயமாக்கும் முயற்சிகளையும் ,நிதி அயோகும், மத்திய மாநில அரசுகளும் கைவிட வேண்டும் என்றார்..

tn_che_08_doctors_association_press_meet_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.