சென்னை: மாநிலத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் அஜித்குமாருக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத் துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்பு சகோதரர் அஜித்குமார், சென்னையில் நடைபெற்ற 46ஆவது தமிழ்நாடு மாநிலத் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் அஜித் குமார் நான்கு தங்கம், இரண்டு வெள்ளி என மொத்தம் ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.
இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும் கூறிவருகின்றனர். சமூக வலைதளங்களில் தற்போது இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.