சென்னை: மக்கள் நல்வாழ்வு துறை டிசம்பர் 24ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 70 ஆயிரத்து 620 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 1033 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு மேற்கு வங்கத்தில் இருந்து வந்த இரண்டு நபர்களுக்கும் ஆயிரத்து 35 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 34 லட்சத்து 29 ஆயிரத்து 444 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தமிழ்நாட்டில் 8 லட்சத்து 11 ஆயிரத்து 115 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. நபர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 217 நம்பர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் ஆயிரத்து 120 நபர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 89 ஆயிரத்து 862 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் பலனின்றி அரசு மருத்துவமனையில் 6 நோயாளிகளும், தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் என 12 பேர் மேலும் இறந்தனர். இதனால் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 36ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 2,23,509
- கோயம்புத்தூர் - 51,696
- செங்கல்பட்டு - 49,556
- திருவள்ளூர் - 42,359
- சேலம் - 31, 287
- காஞ்சிபுரம் - 28,496
- கடலூர் - 24,571
- மதுரை - 20,392
- வேலூர் - 20,094
- திருவண்ணாமலை - 19,072
- தேனி - 16,827
- தஞ்சாவூர் - 16,970
- திருப்பூர் - 16,787
- விருதுநகர் - 16,261
- கன்னியாகுமரி - 16,229
- தூத்துக்குடி - 15,998
- ராணிப்பேட்டை - 15,857
- திருநெல்வேலி - 15,205
- விழுப்புரம் - 14,916
- திருச்சிராப்பள்ளி - 14,010
- ஈரோடு - 13,445
- புதுக்கோட்டை - 11,361
- கள்ளக்குறிச்சி - 10,779
- திருவாரூர் - 10,844
- நாமக்கல் - 11,048
- திண்டுக்கல் - 10,808
- தென்காசி - 8223
- நாகப்பட்டினம் - 8029
- நீலகிரி - 7850
- கிருஷ்ணகிரி - 7781
- திருப்பத்தூர் - 7392
- சிவகங்கை - 6476
- ராமநாதபுரம் - 6295
- தருமபுரி - 6337
- கரூர் - 5096
- அரியலூர் - 4625
- பெரம்பலூர் - 2253