ETV Bharat / city

தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருகிறது - மாநகராட்சி தகவல்!

author img

By

Published : May 17, 2021, 1:16 PM IST

சென்னையில் கரோனா தொற்றுப் பரவல் 21.2 விகிதமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

சென்னை: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் விகிதம் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பவர்களின் விகிதம் 5.35 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அண்ணா நகர், கோடம்பாக்கம், போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகமாக உள்ளதாக தெரிகிறது. அவற்றை குறைக்க மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

சென்னையில் நேற்று மட்டும் 29 ஆயிரத்து 531 நபர்களுக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 247 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கரோனா பரவல் 21.2 விகிதம் அக குறைந்துள்ளது.

100 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அதில் கரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையை கரோனா பரவல் விகிதம் என்று அழைக்கப்படும். அதன்படி சென்னையில் மே 10 தேதி 26.55% ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து தற்போது 21.2% ஆக குறைந்துள்ளது.

இதுவரை மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 297 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 47 ஆயிரத்து 330 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 5, 764 பேர் உயிரிழந்தனர்.சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்களில் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,

அண்ணா நகர் -4730 பேர்

கோடம்பாக்கம் - 4395 பேர்

தேனாம்பேட்டை - 3892 பேர்

ராயபுரம் - 2531 பேர்

அடையாறு - 4510 பேர்

திரு.வி.க. நகர் - 3990 பேர்

தண்டையார்பேட்டை - 3303 பேர்

அம்பத்தூர் - 4446 பேர்

வளசரவாக்கம் - 3401 பேர்

ஆலந்தூர் - 2433 பேர்

பெருங்குடி - 2574 பேர்

மாதவரம் - 2415 பேர்

திருவொற்றியூர் - 1786 பேர்

சோழிங்கநல்லூர் - 1490 பேர்

மணலி - 1016 பேர்

இதையும் படிங்க: 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

சென்னை: தலைநகரில் கரோனா தொற்றுப் பரவல் விகிதம் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் மிக தீவிரமாக உள்ள நிலையில், சென்னையில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பவர்களின் விகிதம் 5.35 ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அண்ணா நகர், கோடம்பாக்கம், போன்ற சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகமாக உள்ளதாக தெரிகிறது. அவற்றை குறைக்க மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்வுகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

சென்னையில் நேற்று மட்டும் 29 ஆயிரத்து 531 நபர்களுக்கு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 247 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கரோனா பரவல் 21.2 விகிதம் அக குறைந்துள்ளது.

100 நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அதில் கரோனா உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையை கரோனா பரவல் விகிதம் என்று அழைக்கப்படும். அதன்படி சென்னையில் மே 10 தேதி 26.55% ஆக இருந்தது. இது படிப்படியாக குறைந்து தற்போது 21.2% ஆக குறைந்துள்ளது.

இதுவரை மொத்தம் 4 லட்சத்து 38 ஆயிரத்து 391 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 297 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 47 ஆயிரத்து 330 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 5, 764 பேர் உயிரிழந்தனர்.சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக சிகிச்சைபெற்று வருபவர்களில் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில்,

அண்ணா நகர் -4730 பேர்

கோடம்பாக்கம் - 4395 பேர்

தேனாம்பேட்டை - 3892 பேர்

ராயபுரம் - 2531 பேர்

அடையாறு - 4510 பேர்

திரு.வி.க. நகர் - 3990 பேர்

தண்டையார்பேட்டை - 3303 பேர்

அம்பத்தூர் - 4446 பேர்

வளசரவாக்கம் - 3401 பேர்

ஆலந்தூர் - 2433 பேர்

பெருங்குடி - 2574 பேர்

மாதவரம் - 2415 பேர்

திருவொற்றியூர் - 1786 பேர்

சோழிங்கநல்லூர் - 1490 பேர்

மணலி - 1016 பேர்

இதையும் படிங்க: 3 லட்சத்துக்கும் கீழ் குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.