ETV Bharat / city

அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் சிறார் உதவி எண்கள் - ஸ்டாலின் அறிவிப்பு

author img

By

Published : Nov 28, 2021, 7:43 AM IST

வரும் கல்வியாண்டிலிருந்து 1098 சிறார் உதவி எண் குறித்த விவரங்கள், அனைத்து பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

cm stalin, mk stalin, முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்டாலின், போக்சோ ஸ்டாலின், pocso stalin
cm stalin

சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012இன் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

போக்சோ சட்டம் குறித்து ஆய்வு

போக்சோ சட்டம் செயல்பாடு குறித்து தமிழ்நாடு, தேசிய அளவிலான பல்வேறு புள்ளி விவரங்கள், போக்சோ சட்டத்தின்கீழ் புகார்களைப் பதிவுசெய்வது மிகவும் எளிமையாக்குதல், இச்சட்டத்தில் பல்வேறுவிதமான பாலியல் குற்றச்செயல்கள் வரையறுக்கப்பட்டபடி அனைத்துக் குற்றங்களையும் சம நோக்குடன் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், மு.க. ஸ்டாலின் அலுவலர்களுக்கு சில உத்தரவுகளை வழங்கினார். அவை கீழ்வருமாறு:

  • ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 குழந்தைகளுக்கு ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்

தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைந்து கிடைக்க ஏதுவாக அதற்கான தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை, இதர உள்கட்டமைப்புகள் கூடுதலாக அமைக்க வேண்டும்.

  • 1098 - சிறார் உதவி எண்

24 மணி நேரமும் செயல்படக்கூடிய கல்வி தகவல் மையத்தின் (எண் - 14417) மூலம் உளவியல் பயிற்சி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையமாகச் செயல்பட்டுவருகிறது.

அதேபோன்று, ஒவ்வொரு வகுப்பறையிலும் 1098 சிறார் உதவி எண் குறித்த விவரங்கள் ஒட்டப்பட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து அனைத்து பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்பட்டு, ஆசிரியர்கள், இதரப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆபாசப் படங்கள் தொடர்புடைய வழக்குகள்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்கு சென்று விசாரணை செய்ய நடமாடும் விசாரணைப் பிரிவு (காவல் வாகனம்) செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், இதுவரை மூன்றாயிரத்து 672 குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்புடைய கணினி தகவல்கள் பெறப்பட்டதில், 81 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 191 விசாரணைக்கு தகுதியான மனுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரூரில் ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்’ திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்

சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமையில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012இன் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (நவம்பர் 27) நடைபெற்றது.

தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து எடுத்துவருகின்ற நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

போக்சோ சட்டம் குறித்து ஆய்வு

போக்சோ சட்டம் செயல்பாடு குறித்து தமிழ்நாடு, தேசிய அளவிலான பல்வேறு புள்ளி விவரங்கள், போக்சோ சட்டத்தின்கீழ் புகார்களைப் பதிவுசெய்வது மிகவும் எளிமையாக்குதல், இச்சட்டத்தில் பல்வேறுவிதமான பாலியல் குற்றச்செயல்கள் வரையறுக்கப்பட்டபடி அனைத்துக் குற்றங்களையும் சம நோக்குடன் தீவிரமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுதல் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் ஆய்வுசெய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், மு.க. ஸ்டாலின் அலுவலர்களுக்கு சில உத்தரவுகளை வழங்கினார். அவை கீழ்வருமாறு:

  • ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்கு ஏதுவாக, தமிழ்நாடு அரசு தனியாக இழப்பீட்டு நிதியை உருவாக்கி இதுவரை 148 குழந்தைகளுக்கு ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை முதற்கட்டமாக வழங்கியுள்ளது. அடுத்தக்கட்டமாக, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இழப்பீடுகள் துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • ஆய்வகங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்

தடயவியல் ஆய்வு அறிக்கைகள் விரைந்து கிடைக்க ஏதுவாக அதற்கான தடயவியல் ஆய்வகங்களின் எண்ணிக்கை, இதர உள்கட்டமைப்புகள் கூடுதலாக அமைக்க வேண்டும்.

  • 1098 - சிறார் உதவி எண்

24 மணி நேரமும் செயல்படக்கூடிய கல்வி தகவல் மையத்தின் (எண் - 14417) மூலம் உளவியல் பயிற்சி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் மையமாகச் செயல்பட்டுவருகிறது.

அதேபோன்று, ஒவ்வொரு வகுப்பறையிலும் 1098 சிறார் உதவி எண் குறித்த விவரங்கள் ஒட்டப்பட்டு, வரும் கல்வி ஆண்டிலிருந்து அனைத்து பாடப் புத்தகங்களிலும் அச்சிடப்பட்டு, ஆசிரியர்கள், இதரப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும்.

ஆபாசப் படங்கள் தொடர்புடைய வழக்குகள்

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொலைதூர இடங்களுக்கு சென்று விசாரணை செய்ய நடமாடும் விசாரணைப் பிரிவு (காவல் வாகனம்) செயல்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னையில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில், இதுவரை மூன்றாயிரத்து 672 குழந்தைகள் ஆபாசப் படங்கள் தொடர்புடைய கணினி தகவல்கள் பெறப்பட்டதில், 81 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 191 விசாரணைக்கு தகுதியான மனுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கரூரில் ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்’ திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.