ETV Bharat / city

பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

author img

By

Published : Aug 27, 2020, 12:31 AM IST

சென்னை: பல்வேறு நிகழ்வுகளில் மரணமடைந்தவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

tn cm
tn cm

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

"கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், ஈசாந்திமங்கலம் தெற்கு அரசன் குழி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் குலை வாழை மரம் கட்டுவதற்காக கம்பத்தில் ஏறும்போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் செல்வன் சூரியா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் சாமிநாதன் என்பவர் அரசுப் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவர் கணேசன் என்பவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். எடப்பாடி வட்டம், எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரின் மகன் சதீஸ்குமார் என்பவர் காவேரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து என்பவர் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம், கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன்கள் சிறுவர்கள் ஹிருத்திக் ரோஷன், அரவிந்த் ஆகிய இருவரும் கழிவுநீர்த் தொட்டி இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகள் சிறுமி கீர்த்திகா என்பவர் நம்பியாற்று பகுதியில் விளையாடச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தைத் சேர்ந்த ஏரோனிமூஸ் என்பவரின் மகன் அந்தோணி பிரகாஷ் என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் தந்தை நடராஜன், தாய் திருமதி அன்னியம்மாள் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் செந்தில்வேலன் என்பவரின் மனைவி முல்லை என்பவர் பலத்த காயமடைந்துள்ளார்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுடன், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தீ விபத்தில் காயமடைந்த முல்லை என்பவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு 2ஆவது தலைநகரம் உதயமாகும்” - கே.என்.நேரு

இதுகுறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

"கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம், ஈசாந்திமங்கலம் தெற்கு அரசன் குழி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் குலை வாழை மரம் கட்டுவதற்காக கம்பத்தில் ஏறும்போது, தவறி விழுந்து உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சமணி என்பவரின் மகன் செல்வன் சூரியா குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த மருதமுத்து என்பவரின் மகன் சாமிநாதன் என்பவர் அரசுப் பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், இருப்பாளி கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவரின் கணவர் கணேசன் என்பவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார். எடப்பாடி வட்டம், எடப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சுமதி என்பவரின் மகன் சதீஸ்குமார் என்பவர் காவேரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகன் மாரிமுத்து என்பவர் எதிர்பாராதவிதமாக சாலை விபத்தில் உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம், கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன்கள் சிறுவர்கள் ஹிருத்திக் ரோஷன், அரவிந்த் ஆகிய இருவரும் கழிவுநீர்த் தொட்டி இடிந்து விழுந்து உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம், திருவம்பலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகள் சிறுமி கீர்த்திகா என்பவர் நம்பியாற்று பகுதியில் விளையாடச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கிராமத்தைத் சேர்ந்த ஏரோனிமூஸ் என்பவரின் மகன் அந்தோணி பிரகாஷ் என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டம், புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரின் தந்தை நடராஜன், தாய் திருமதி அன்னியம்மாள் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் செந்தில்வேலன் என்பவரின் மனைவி முல்லை என்பவர் பலத்த காயமடைந்துள்ளார்.

மேற்கண்ட பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 12 நபர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததுடன், இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், தீ விபத்தில் காயமடைந்த முல்லை என்பவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “ஸ்டாலின் முதலமைச்சரான பின்பு 2ஆவது தலைநகரம் உதயமாகும்” - கே.என்.நேரு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.