ETV Bharat / city

மழை நீரில் தடுக்கி விழுந்த முதியவர் பலி

சென்னை: வில்லிவாக்கத்தில் மழை நீர் தேங்கியிருந்த சாலையில் வழுக்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

author img

By

Published : Jul 18, 2021, 5:46 PM IST

CHENNAI OLD MEN FELL INTO RAIN WATER WAS DIED, மழையில் முதியவர் பலி
மழை நீரில் தடுக்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு

சென்னை அதன் புறநகர் பகுதியில் சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் நேற்று (ஜூலை.18) இரவு வில்லிவாக்கம், நாதமுனி திரையரங்கம் நடைபாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கே தேங்கியிருந்த மழை நீரில் கால் தவறி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மழையால் விபரீதம்

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லிவாக்கம் காவல் துறையினர் கந்தசாமியின் உடலை உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழை நீரில் விழுந்து மயக்க நிலையில் இருந்ததால் மூச்சுத்திணறி முதியவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

சென்னை அதன் புறநகர் பகுதியில் சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (75). இவர் நேற்று (ஜூலை.18) இரவு வில்லிவாக்கம், நாதமுனி திரையரங்கம் நடைபாதை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கே தேங்கியிருந்த மழை நீரில் கால் தவறி விழுந்து மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

மழையால் விபரீதம்

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வில்லிவாக்கம் காவல் துறையினர் கந்தசாமியின் உடலை உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழை நீரில் விழுந்து மயக்க நிலையில் இருந்ததால் மூச்சுத்திணறி முதியவர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மறைந்த ஸ்டேன் சுவாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.