ETV Bharat / city

ஐஐடியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரிப்பு!

author img

By

Published : Apr 30, 2022, 12:48 PM IST

சென்னை ஐஐடியில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது.

CHENNAI IIT CORONA CASES UPDATE
CHENNAI IIT CORONA CASES UPDATE

சென்னை: சென்னை ஐஐடியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் ஒரு மாணவர், ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ஏப். 20ஆம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், ஏப். 21ஆம் தேதி மேலும் 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, ஐஐடியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனை முடிவில், ஏப். 22ஆம் தேதி 21 பேருக்கும், 23ஆம் தேதி 22 பேருக்கும், 24ஆம் தேதி 5 பேருக்கும், 25ஆம் தேதி 20 பேருக்கும், 26ஆம் தேதி 32 பேருக்கும், 27ஆம் தேதி 33 பேருக்கும், 28ஆம் தேதி மேலும் 26 பேருக்கும், நேற்று (ஏப். 29) 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை செய்தவர்களில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இன்று (ஏப். 30) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஐஐடியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அனைவரும் ஐஐடி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 7 ஆயிரத்து 300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரோனா பரவல் விகிதம் 2.7 விழுக்காடாக உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் மருத்துவ மாணவர் சேர்க்கை..! அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

சென்னை: சென்னை ஐஐடியில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து படித்து வருகின்றனர். விடுதியில் தங்கி படிக்கும் ஒரு மாணவர், ஏப். 19ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, ஏப். 20ஆம் தேதி 2 மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ததில், ஏப். 21ஆம் தேதி மேலும் 9 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, ஐஐடியில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனை முடிவில், ஏப். 22ஆம் தேதி 21 பேருக்கும், 23ஆம் தேதி 22 பேருக்கும், 24ஆம் தேதி 5 பேருக்கும், 25ஆம் தேதி 20 பேருக்கும், 26ஆம் தேதி 32 பேருக்கும், 27ஆம் தேதி 33 பேருக்கும், 28ஆம் தேதி மேலும் 26 பேருக்கும், நேற்று (ஏப். 29) 11 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை செய்தவர்களில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இன்று (ஏப். 30) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், ஐஐடியில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்ததால் அனைவரும் ஐஐடி வளாகத்திலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 7 ஆயிரத்து 300 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரோனா பரவல் விகிதம் 2.7 விழுக்காடாக உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கூடுதல் மருத்துவ மாணவர் சேர்க்கை..! அமைச்சர் மா. சுப்பிரமணியன்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.