ETV Bharat / city

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லிக்கு அழைத்து செல்ல சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

காங்கிரஸ் ஆட்சியின்போது 263 பேருக்கு விசா வழங்கியதில் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனை டெல்லி அழைத்து செல்ல சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

author img

By

Published : May 18, 2022, 6:16 PM IST

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லிக்கு அழைத்து செல்ல சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லிக்கு அழைத்து செல்ல சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி

சென்னை: கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மின் திட்டம் சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டதால் சீனாவிலிருந்து தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு வர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம், கார்த்தி சிதம்பரத்தை அவரது கூட்டாளிகள் மூலம் அணுகியதாகக் சொல்லப்படுகிறது.

இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அலுவலர்களுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

cbi
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லிக்கு அழைத்து செல்ல சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியதில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் செல்ல சிபிஐ அனுமதி கோரியது. இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் பாஸ்கர ராமனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது - சிபிஐ அதிரடி

சென்னை: கடந்த 2009-2014-ல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மாநிலத்தில் தால்வாண்டி சாபோ மின்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மின் திட்டம் சீனாவைச் சேர்ந்த ஷான்டாங் எலெக்ட்ரிக் பவர் கன்ஸ்டிரக்சன் கார்ப் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அங்கே, மின் திட்டத்தை செயல்படுத்த தாமதம் ஏற்பட்டதால் சீனாவிலிருந்து தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்டு வர அந்த நிறுவனம் முயற்சித்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த உச்ச வரம்புக்கு மேல் விசாக்கள் தேவைப்பட்டன. எனவே, சம்பந்தப்பட்ட சீன நிறுவனம், கார்த்தி சிதம்பரத்தை அவரது கூட்டாளிகள் மூலம் அணுகியதாகக் சொல்லப்படுகிறது.

இதையடுத்து அரசு விதிகளை மீறி சீன நிறுவனத்தின் அலுவலர்களுக்கு 263 விசாக்கள் ஒதுக்கப்பட்டதாகவும், இதற்காக 50 லட்சம் ரூபாய் லஞ்சமாகத் தரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

cbi
கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லிக்கு அழைத்து செல்ல சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி
இதன் அடிப்படையில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 10 இடங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியதில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைது செய்யப்பட்டார். சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை டெல்லி அழைத்துச் செல்ல சிபிஐ அனுமதி கோரியது. இதை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம் பாஸ்கர ராமனை டெல்லிக்கு அழைத்துச் செல்ல சிபிஐக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது - சிபிஐ அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.