ETV Bharat / city

சென்னையில் பெண்ணிடம் செயின் பறிப்பு

author img

By

Published : Sep 22, 2020, 11:37 AM IST

சென்னை: சங்கர் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர்கள் செயின் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செயின்
செயின்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(37). இன்று தனது மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது பம்மல் சாலையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ்ச்செல்வியையும் அவரது மாமியாரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் கிரிகோரி தெருவைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(37). இன்று தனது மாமியாருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது பம்மல் சாலையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் தமிழ்ச்செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தமிழ்ச்செல்வியையும் அவரது மாமியாரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.