சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.20) கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர் தொகுதி, வேட்டவலம் பேரூராட்சிக்கு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமாா என கேள்வி எழுப்பினார். மேலும் பேரூராட்சிகள் மாநிலம் முழுவதும் தாயில்லா பிள்ளையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, "கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி பகுதிகளில் ஓரளவு பணிகள் தான் நடைபெற்று உள்ளது. 490 பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவை அருகில் இருக்கும் குடிநீர் ஆதாரங்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.