ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 313 வேதியியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு கடந்த வாரத்தில் நடந்தது. அவர்களுக்கான நியமன உத்தரவுகள் இன்று தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டன.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், சென்னை மாவட்டத்திலிருந்து தேர்வுபெற்ற ஆசிரியர்களுக்கு கல்வித் துறை வளாகத்தில் பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.
பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதால் அனைத்து ஆசிரியர்களும் உடனடியாக பணியில் சேர வேண்டும் என கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை வெளியீடு