ETV Bharat / city

நடிகை மீரா மிதுன் கைது

author img

By

Published : Aug 14, 2021, 2:59 PM IST

Updated : Aug 14, 2021, 6:35 PM IST

Meera Mithun
Meera Mithun

14:56 August 14

நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுனை கேரளாவில் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார்.

மேலும் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல் நானும் இருப்பேன் எனப் பேசி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரை நாளை மதியத்திற்குள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன் பின்னர் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்வதற்கு முன்பு, தன்னை காவல்துறையினர் மிகவும் துன்புறுத்துவதாகவும், தன்னை தொட்டால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் முறையிட்டு மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

14:56 August 14

நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுனை கேரளாவில் கைது செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறு கருத்துகள் பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறும் சைபர் கிரைம் போலீசாரால் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நடிகை மீரா மிதுன் சம்மனை ஏற்று ஆஜராகாமலும், தான் ஆஜராகாமல் இருந்ததற்கு உரிய விளக்கத்தை அளிக்காமலும் தலைமறைவாக இருந்து வந்தார்.

மேலும் அன்றைய தினமே தன்னை யாராலும் கைது செய்ய முடியாது எனவும், அப்படியே கைது செய்தாலும் பெருந்தலைவர்கள் சிறையில் இருந்ததைப் போல் நானும் இருப்பேன் எனப் பேசி மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை மீரா மிதுனை கேரளாவில் வைத்து சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவரை நாளை மதியத்திற்குள் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ளவும் சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன் பின்னர் நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுனை கைது செய்வதற்கு முன்பு, தன்னை காவல்துறையினர் மிகவும் துன்புறுத்துவதாகவும், தன்னை தொட்டால் இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரிடம் முறையிட்டு மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Last Updated : Aug 14, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.