ETV Bharat / city

ஆம்புலன்ஸ்க்கு தனி செயலி கொண்டு வரலாம்: நடிகர் அபி சரவணன் கோரிக்கை!

கடந்த இரு வாரங்களில் ஆறு மரணச் செய்தி அதில் மூன்று எனது நெருங்கிய குடும்ப உறவினர்கள் ஒரு மரணத்தை நேரடியாக கண்டவன் என்ற முறையிலும் அந்த உயிர் பிரியும் போது ஆம்புலன்ஸ்க்கு நான்கு முறை அழைத்தும் பயனளிக்காமல் நேரமின்மையால் கையாலாகாமல் சித்தப்பா உயிரை பறிகொடுத்து கண்ணீரோடு நின்றவன் என்ற முறையிலும் வலிகளுடன் இந்த பதிவு என கூறி நடிகர் அபி சரவணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Abi Saravanan
Actor Abi Saravanan
author img

By

Published : Aug 31, 2020, 4:29 PM IST

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நமது இந்தியாவில் அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ் உள்ளது. "108" என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும். உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில், அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து காயம்பட்டவரை மருத்துவமனை அழைத்துச் சென்று இருக்கிறேன்.

இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் எழுதுகிறேன். தவிர, யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல. மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் 108 நம்பருக்கு போன் செய்தவுடன் நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ் கால்சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது, எந்த மாவட்டம் எந்த தாலுகா, என்ன தெரு என்பதை தெளிவாக கேட்கிறார்கள் இன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது.

எனது மனதில் தோன்றிய எண்ணம்

அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா... இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது. எனவே எந்த எண்ணில் இருந்து அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து மற்றும் அல்லது லேண்ட்லைன் தொலைபேசியாக இருந்தால் ஜிபிஎஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வண்டியில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிவிக்கக் கூடாது?

அபி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை
அபி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை

இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.? உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும். ஏனெனில் கண்முண்ணே ஒரு உயிர் போராடி கொண்டிருக்கம் போது, தாலுகா, வட்டம் பகுதி என விலாவரியாக அனைவராலும் தெளிவாக கூற முடியாது அல்லவா... தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த முறை சாதாரண கால்டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கும் இது நிச்சயம் சாத்தியமே. மேலும், கோவிட் - 19 நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல, அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனி செயலியை அனைத்து மொபைல்களுக்கும் கட்டாய செயலியாக அறிமுகப்படுத்தலாமே.

இது எனது எண்ணம் மட்டுமே. இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே? வலிகளுடன் அபி சரவணன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை; கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற உறவினர்கள்!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நமது இந்தியாவில் அவசர மருத்துவ தேவைக்கு அரசு ஆம்புலன்ஸ் உள்ளது. "108" என்ற இலக்கத்தை அழைப்பதன் மூலம் உடனடி மருத்துவ உதவி கிடைக்கும். உண்மையில் பலமுறை நானே சாலையில் ஏதாவது விபத்து எனில், அந்த எண்ணிற்கு போன் செய்து அவர்கள் வரும் வரை காத்திருந்து காயம்பட்டவரை மருத்துவமனை அழைத்துச் சென்று இருக்கிறேன்.

இந்த பதிவு பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் எழுதுகிறேன். தவிர, யாரையும் எந்த துறையும் குறை கூறுவதற்காக அல்ல. மெடிக்கல் அவசர தேவை என்றவுடன் 108 நம்பருக்கு போன் செய்தவுடன் நம்மை தொடர்பு கொள்ளும் ஆம்புலன்ஸ் கால்சென்டரில் நாம் எங்கிருந்து அழைக்கிறோம் அதாவது, எந்த மாவட்டம் எந்த தாலுகா, என்ன தெரு என்பதை தெளிவாக கேட்கிறார்கள் இன்றும் இந்த முறைதான் பலரது உயிரை காப்பாற்றி வருகிறது.

எனது மனதில் தோன்றிய எண்ணம்

அவசர தேவை என்றால் மட்டுமே நாம் ஆம்புலன்ஸ் அழைக்கிறோம் அல்லவா... இன்றைய தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேற்றம் இருக்கிறது. எனவே எந்த எண்ணில் இருந்து அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் அழைக்கிறார்களோ அவர்களது மொபைல் எண்ணை வைத்து மற்றும் அல்லது லேண்ட்லைன் தொலைபேசியாக இருந்தால் ஜிபிஎஸ் வைத்து அந்த ஏரியாவை அல்லது பகுதியை துல்லியமாக ஏன் அந்த பகுதியின் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு வண்டியில் உள்ள ஜிபிஎஸ் கருவி மூலம் தெரிவிக்கக் கூடாது?

அபி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை
அபி சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை

இதன்மூலம் நேரம் வினாடிகளில் வீணடிக்கப்படுவது தவிர்க்கபடலாம் அல்லவா.? உயிருக்கு போராடுபவர்களுக்கு ஒவ்வொரு வினாடியும் இன்றியமையாதது. உடன் இருப்பவர்களின் மனநிலையும் பதட்டத்தில் அல்லவா இருக்கும். ஏனெனில் கண்முண்ணே ஒரு உயிர் போராடி கொண்டிருக்கம் போது, தாலுகா, வட்டம் பகுதி என விலாவரியாக அனைவராலும் தெளிவாக கூற முடியாது அல்லவா... தயவுசெய்து இதை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

இந்த முறை சாதாரண கால்டாக்ஸி மற்றும் உணவு டெலிவரிக்கு மட்டும் சாத்தியம் எனில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்கும் இது நிச்சயம் சாத்தியமே. மேலும், கோவிட் - 19 நோய்க்காக ஆரோக்கிய சேது ஆப் அறிமுகபடுத்தியது போல, அவசர தேவையான ஆம்புலன்ஸ் போலீஸ் தீயணைப்பு போன்றவற்வைகளுக்கு தனி செயலியை அனைத்து மொபைல்களுக்கும் கட்டாய செயலியாக அறிமுகப்படுத்தலாமே.

இது எனது எண்ணம் மட்டுமே. இதை செயலாக்க முடியுமா என்பதை பரிசீலனை செய்யலாமே? வலிகளுடன் அபி சரவணன்.

இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை; கர்ப்பிணியை தோளில் சுமந்துச் சென்ற உறவினர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.