ETV Bharat / city

கரோனாவை வென்ற 10 பேர் - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து கரோனா சிகிச்சை முடிந்த 10 பேர் இன்று சிகிச்சைக்கு பிறகு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

discharged
discharged
author img

By

Published : Apr 18, 2020, 4:13 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 1,323 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த மார்ச் மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 28 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 253 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து 8 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறுகையில், ”கரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் சீக்கிரமாக குணமடைய அதுவும் காரணமாக அமைந்தது.

குணமடைந்த அனைவரும் 14 நாள்கள் தங்களது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். மீண்டும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை தொடர்புகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு முறைகள் :

சிகிச்சையின்போது பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலை என்ன என தெரிந்த பிறகு அவருக்கு என்ன ஊட்டச்சத்து உணவை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்து வழங்கினர். அதன்படி அதிக ஊட்டச்சத்து தேவையானவருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துடன் பிஸியோ தெரபி, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு, முட்டை, இஞ்சி சாறு கலந்த ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

சிறப்பு வார்டு :

கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் 250ம், கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 90 படுக்கைகளுடன் தனி பிரிவும் தயார் நிலையில் உள்ளது ” என்றார்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து மலேசியா புறப்பட்ட 94 சுற்றுலாப் பயணிகள்!

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை 1,323 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் கடந்த மார்ச் மாதம் முதல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 28 நாள்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 253 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து 8 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 10 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் வசந்தாமணி கூறுகையில், ”கரோனா தொற்றுக்காக அனுமதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்கள் சீக்கிரமாக குணமடைய அதுவும் காரணமாக அமைந்தது.

குணமடைந்த அனைவரும் 14 நாள்கள் தங்களது வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். மீண்டும் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை தொடர்புகொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உணவு முறைகள் :

சிகிச்சையின்போது பாதிக்கப்பட்ட அனைவரின் உடல்நிலை என்ன என தெரிந்த பிறகு அவருக்கு என்ன ஊட்டச்சத்து உணவை வழங்க வேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்து வழங்கினர். அதன்படி அதிக ஊட்டச்சத்து தேவையானவருக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துடன் பிஸியோ தெரபி, ஆன்டிபயாடிக் மாத்திரைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு, முட்டை, இஞ்சி சாறு கலந்த ஊட்டச்சத்து உணவு வழங்கப்பட்டது.

சிறப்பு வார்டு :

கீழப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கரோனா அறிகுறிகளுடன் பரிசோதனைக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் 250ம், கரோனா உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 90 படுக்கைகளுடன் தனி பிரிவும் தயார் நிலையில் உள்ளது ” என்றார்.

இதையும் படிங்க: சென்னையிலிருந்து மலேசியா புறப்பட்ட 94 சுற்றுலாப் பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.