ETV Bharat / city

ஆட்டோவில் கஞ்சா விற்பனை: பெண்கள் உள்பட 10 பேர் கைது!

author img

By

Published : Oct 9, 2020, 10:10 PM IST

சென்னை: வடசென்னையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 10 பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

கஞ்சா விற்பனை
கஞ்சா விற்பனை

வடசென்னை பகுதி முழுவதும் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி வடசென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பவர்களைத் தேடிவந்தனர்.

துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர் தினகரன் ஆனந்தகுமார் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில் வடசென்னை பகுதிகளில் ஆட்டோக்களில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை ஒட்டி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் விஜய், தலைமை காவலர் முருகேசன் காவலர் விமல் ஆகியோர் காசிமேடு ராயபுரம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஆட்டோவை தேடிவந்தனர்.

வலைதளங்கள் குற்றவாளிகள் எனப் பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தி மணிகண்டன் என்ற குடுமி மணி, பிரபாகரன் என்ற காசி ஆகியோரும், சுமித்ரா, திவ்யபாரதி, மஞ்சுளா உள்ளிட்ட பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இதேபோன்று காசிமேடு N-2 காவல் நிலையத்தில் சுப்பிரமணி, திலகவதி, குணசேகரன், அழகுராஜ், முத்தழகன் உள்ளிட்ட ஐந்து பேரை கைதுசெய்தனர்.

விசாரணையில், ஆண்கள் மொத்தமாக கஞ்சா புகையிலை பொருள்களை வாங்கி பெண்களிடம் கொடுத்து சிறிய பாக்கெட்டுகளாக உருவாக்கி எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்தமாக நான்கு பெண்கள் உள்பட 10 பேரை கைதுசெய்யப்பட்டனர். ஐந்து கிலோ கஞ்சா, 13 செல்போன்கள், ரொக்கப்பணம், கஞ்சா பொட்டலங்கள் பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்திய எடை மிஷின், பேக்கிங் கவர் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றவாளிகள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

வடசென்னை பகுதி முழுவதும் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலை ஒட்டி வடசென்னை வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து கஞ்சா விற்பவர்களைத் தேடிவந்தனர்.

துணை ஆணையாளர் சுப்புலட்சுமி, உதவி ஆணையாளர் தினகரன் ஆனந்தகுமார் தலைமையில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதில் வடசென்னை பகுதிகளில் ஆட்டோக்களில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை ஒட்டி தனிப்படையினர் உதவி ஆய்வாளர் விஜய், தலைமை காவலர் முருகேசன் காவலர் விமல் ஆகியோர் காசிமேடு ராயபுரம் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் ஆட்டோவை தேடிவந்தனர்.

வலைதளங்கள் குற்றவாளிகள் எனப் பல்வேறு கட்டங்களாக சோதனை நடத்தி மணிகண்டன் என்ற குடுமி மணி, பிரபாகரன் என்ற காசி ஆகியோரும், சுமித்ரா, திவ்யபாரதி, மஞ்சுளா உள்ளிட்ட பெண்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இதேபோன்று காசிமேடு N-2 காவல் நிலையத்தில் சுப்பிரமணி, திலகவதி, குணசேகரன், அழகுராஜ், முத்தழகன் உள்ளிட்ட ஐந்து பேரை கைதுசெய்தனர்.

விசாரணையில், ஆண்கள் மொத்தமாக கஞ்சா புகையிலை பொருள்களை வாங்கி பெண்களிடம் கொடுத்து சிறிய பாக்கெட்டுகளாக உருவாக்கி எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு ஆகிய பகுதிகளில் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

ஒட்டுமொத்தமாக நான்கு பெண்கள் உள்பட 10 பேரை கைதுசெய்யப்பட்டனர். ஐந்து கிலோ கஞ்சா, 13 செல்போன்கள், ரொக்கப்பணம், கஞ்சா பொட்டலங்கள் பேக்கிங் செய்வதற்காக பயன்படுத்திய எடை மிஷின், பேக்கிங் கவர் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

குற்றவாளிகள் 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.