ETV Bharat / business

மளமளவென்று உயர்ந்த இந்தியப் பங்குச்சந்தை - Top losers

இந்தியப் பங்குச்சந்தை இன்று பெரியளவில் ஏற்றம் கண்டு தனது வர்த்தகத்தை நிறைவுசெய்துள்ளது.

மளமளவென்று உயர்ந்த இந்திய பங்குச்சந்தை
மளமளவென்று உயர்ந்த இந்திய பங்குச்சந்தை
author img

By

Published : Nov 3, 2020, 6:38 PM IST

Updated : Nov 3, 2020, 6:43 PM IST

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 365 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 504 புள்ளிகள் (1.27 விழுக்காடு) உயர்ந்து 40,261.13 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144.35 புள்ளிகள் (1.24 விழுக்காடு) உயர்ந்து 11,813.50 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 6.72 விழுக்காடு ஏற்றம் கண்டது. மேலும், ஹிண்டல்கோ, எஸ்பிஐ, பவர் கிரீட், ஹெச்டிஎஃசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.

மறுபுறம் யுபிஎல், என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

மளமளவென்று உயர்ந்த இந்தியப் பங்குச்சந்தை

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.47,590-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.61,900க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: கார் விற்பனை உயர்வால் மகிழ்ச்சியடைய தேவையில்லை - ஆட்டோமொபைல் டீலர் சங்க தலைவர்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நேற்று வர்த்தகமானதைவிட சுமார் 365 புள்ளிகள் உயர்ந்து இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இன்று நாள் முழுவதும் ஏற்றத்திலேயே வர்த்தகமானது.

இன்றைய வர்த்தக நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 504 புள்ளிகள் (1.27 விழுக்காடு) உயர்ந்து 40,261.13 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 144.35 புள்ளிகள் (1.24 விழுக்காடு) உயர்ந்து 11,813.50 புள்ளிகளிலும் தங்கள் வர்த்தகத்தை நிறைவுசெய்தன.

ஏற்றம், இறக்கம் கண்ட பங்குகள்

அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கியின் பங்குகள் 6.72 விழுக்காடு ஏற்றம் கண்டது. மேலும், ஹிண்டல்கோ, எஸ்பிஐ, பவர் கிரீட், ஹெச்டிஎஃசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் அதிக உயர்வைச் சந்தித்தன.

மறுபுறம் யுபிஎல், என்டிபிசி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைக் கண்டன.

மளமளவென்று உயர்ந்த இந்தியப் பங்குச்சந்தை

தங்கம், வெள்ளி விலை

சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.47,590-க்கு விற்பனையானது. அதேபோல வெள்ளியின் விலை 200 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.61,900க்கு விற்பனையானது.

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், டீசல் ரூ.75.95-க்கும் விற்பனையானது.

இதையும் படிங்க: கார் விற்பனை உயர்வால் மகிழ்ச்சியடைய தேவையில்லை - ஆட்டோமொபைல் டீலர் சங்க தலைவர்

Last Updated : Nov 3, 2020, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.